கூடு

கூடு, கலைச்செல்வி,யாவரும் பதிப்பகம், விலை: ரூ.190. எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தான் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார். இவருடைய சிறுகதைகள் மொழியின் மீது மௌனத்தை ஏற்றுபவை. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக்கொள்ளலாம். எல்லாக் கதைகளின் மீதும் ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தொடக்க காலக் கதைகளில் இந்தத் தன்மை இல்லை; ஒரு தெளிவான நிலமும் கதையும் இருந்தன. இந்தத் தொகுப்பில் தன்னையே அவர் கடந்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 24/4/21 இந்தப் […]

Read more

நீலகண்டம்

நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை ரூ.270. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு […]

Read more

ஓவியம் தேடல்கள் புரிதல்கள்

ஓவியம், தேடல்கள், புரிதல்கள், கணபதி சுப்பிரமணியம், யாவரும் பதிப்பகம்,  விலை: ரூ.350. ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம், சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளைக் கீற்றிவருகிறார். இவர் எழுதி சமீபத்தில் ‘யாவரும் பதிப்பக’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகமானது ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மிக முக்கியமானது. நன்றி: தமிழ் இந்து, 04.04.2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

கடற்காகம்

கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 அரபு நாடுகளின் அரசியல் இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் […]

Read more

அரபு நாடுகளின் அரசியல்

அரபு நாடுகளின் அரசியல், கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் இன்னொரு முகத்தைப் பற்றி […]

Read more

நஞ்சும் துளி அமுதமும்

நஞ்சும் துளி அமுதமும், நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.270 கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் விநியோகம், […]

Read more

நான்காம் சுவர்

நான்காம் சுவர், பாக்யம் சங்கர், யாவரும் பதிப்பகம், விலை 375ரூ. சொற்களைக் கடந்த வாழ்வு வட சென்னை மக்களின் வாழ்க்கையை ஆழமாக நான்காம் சுவர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பாக்கியம் சங்கர். நல்ல குணாம்சம் கொண்டவர்கள் மட்டும்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்களா அல்லது நல்ல குணாம்சங்களுடன் மட்டும்தான் நாம் வாழ்கிறோமா என்ன? என்கிற கேள்விகளை இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. இளைய ராகங்கள் கட்டுரையில், ஒரு வேனில் ஒலிப்பெருக்கி சகிதம் அமர்ந்துகொண்டு பாடும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. மழுங்கிய விரலில் எவர்சில்வர் தூக்குச் சட்டியை […]

Read more

சலூன்

சலூன், க.வீரபாண்டியன், யாவரும் பதிப்பகம், விலை 140ரூ. முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் […]

Read more

டொரினா

டொரினா, கார்த்திக் பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், விலை 100ரூ. புதிய களத்தில் புதிய கதைகள் கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான டொரினாவிலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள். பின் ஏன் டொரினா? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் […]

Read more

காலத்தைச் செதுக்குபவர்கள்

காலத்தைச் செதுக்குபவர்கள், ராம் முரளி, யாவரும் பதிப்பகம், விலை 200ரூ. திரை மேதைகளை அறிவோம் மொழிபெயர்ப்புகளின் வாயிலாகத் திரையுலக உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் ராம் முரளியின் இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இது. திரைத் துறையில் தீவிரமாக இயங்கிய இயக்குநர்களின் வாழ்வை அறிவதன் மூலம் அவர்களது படைப்புகளை நெருக்கமான அணுக உதவும்விதமாக நேர்காணல்களும் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆன்மிக மற்றும் தத்துவார்த்தக் கண்ணோட்டம் கொண்ட இயக்குநர்கள், அரசியல்ரீதியில் திரைப்படங்களை அணுகியவர்கள், புதிய திரைப்பாணியுடன் வலம்வரும் சமகாலப் படைப்பாளிகள் என மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தி இந்து, […]

Read more
1 2