நேபாளமும் பண்டரிபுரமும்

நேபாளமும் பண்டரிபுரமும், வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 46ரூ. திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை கேட்டவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அவ்வளவு மகிழ்ச்சியை அவருடைய புத்தகங்களைப் படிப்பவர்களும் பெறுவார்கள். வாரியார் சுவாமிகள் நோபாளத்துக்கும், பண்டரிபுரத்துக்கும் சென்று வந்தது பற்றி அவர் எழுதிய புத்தகம் இது. படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, தாஜ்மகாலுக்கும் வாரியார் சென்று வந்திருக்கிறார். அதுபற்றியும் விவரித்திருக்கிறார். அரிய கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்,பெ.கு. பொன்னம்பலநாதன், பக் 256, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, விலை 125ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-5.html அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்ற வீணை வாசிக்கக் கற்றக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் […]

Read more