வாடாமல்லி

வாடாமல்லி, சு.சமுத்திரம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 280ரூ.

அமரர் ஆதித்தனாரின் இலக்கிய விருது பெற்ற இந்த நாவலின் கரு, மற்ற எழுத்தாளர்கள் கையாளத் தயங்கும் அரவாணிகள் பற்றியது ஆகும். அரவாணிகள் பலரை நேரில் சந்தித்து, அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்த ஆசிரியர், அவற்றின் மூலம் அரவாணிகள் தொடர்பான அத்தனை அம்சங்களையும் இந்த நூலில் தந்து இருக்கிறார்.

ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறிய சுயம்புவின் மன உளைச்சல்கள், சமுதாயத்தில் அவர் எதிர்கொண்ட அடி, உதைகள், அவமானங்கள் எல்லாம், வேதனை தோய்ந்த வார்த்தைகளில், கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முழுமையாக பெண்ணாக மாறுவதற்காக வீட்டிலேயே நடத்தப்படும் சிகிச்சை முறையைப் படிக்கும்போதே, அதன் வலியை நாமும் உணரும் வகையில் தந்து இருப்பது, ஆசிரியர் இந்தப் பிரச்சினையில் எந்த அளவு ஒன்றிப்போய் நாவலைப் படைத்து இருக்கிறார் என்பதற்கு சான்று வழங்குவதாக இருக்கிறது.

அரவாணியைப் பெற்றெடுத்த குடும்பம் படும் பாடு, அரவாணிகள் சந்திக்கும் வேதனைகள் ஆகியவற்றை விவரமாகத் தந்து இருப்பதோடு, அரவாணிகளிடத்திலும் மனிதாபிமானம் உண்டு என்பதையும் இந்த நாவல் எடுத்துக் காட்டுகிறது.

நன்றி: தினத்தந்தி, 8/5/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029443.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *