ஊடகத் தேனீ ஸ்ரீதர்

ஊடகத் தேனீ ஸ்ரீதர், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. தன் பணிக்காலம் முழுவதையும், ஒளி, ஒலி ஊடகங்களுடன் தன்னை இணைத்து, ஊடகங்களை கல்விக்காகவும், அறிவியல் விழிப்புணர்வுக்காகவும் பயன்பட வைத்தவர் ஸ்ரீதர். அவரது வாழ்க்கை வரலாற்றை, ‘ஊடகத் தேனீ ஸ்ரீதர்’ என்ற தலைப்பில் இந்த நுாலை வெளியிட்டுள்ளது. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில், பகுதி நேர தயாரிப்பாளராக, அறிவியல் நிகழ்ச்சிகளை தயாரிக்க துவங்கிய ஸ்ரீதர், அ.இ.வானொலியின் சயின்ஸ் ஆபீசர், கோல்கட்டா தொலைக்காட்சி நிலைய இயக்குனர் என, பொது சேவை […]

Read more

அழகர் அணை

அழகர் அணை, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைஞன் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்நாட்டில் சமீபகாலங்களாக எந்தவித புதிய அணைகளும் கட்டப்படவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் ஒரு வானம் பார்த்த பூமியாகும். அங்கு விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்கு சரியான திட்டங்கள் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவாகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்காக குடிநீர் வசதிக்கும், நீர்பாசன வசதிக்கும் அழகர் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 90 ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளது. பெரியாறு, வைகை […]

Read more

கூரேசை விஜயம்

கூரேசை விஜயம், ஆசிரியர் ஆங்கிலத்தில் டாக்டர் கே.பி. வாசுதேவன், தமிழில் பி.வி. ஓம் பிரகாஷ் நாராயணன், கலைஞன் பதிப்பகம், பக். 500, விலை 500ரூ. குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது. கூரேசர் என்று அழைக்கப்படும், ஸ்ரீ கூரத்தாழ்வாரின் வாழ்க்கையும், அவருடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்த, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையும், இந்நுாலில் இரண்டறக் கலந்து விவரிக்கப்பட்டுள்ள அழகு பெரிதும் பாராட்டுதற்குரியது. டாக்டர் பி.கே.வாசுதேவன் எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கமாக இந்நுால் வெளிவந்துள்ள போதிலும், […]

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், ஜெ. ஜெயஸிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 218ரூ. ஜேகே என்கிற ஜெயகாந்தன் என்கிற எழுத்துச் சித்தரின் நூல் வடிவம் பெறாத பேட்டிகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் என, பல்வேறு இதழ்களில் வெளிவந்தவற்றைத் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். பொதுவுலக வாழ்க்கையிலும், எழுத்துலக வாழ்க்கையிலும் ஜெயகாந்தன் யார் என்பதைப் பற்றி, அவருடைய வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவும். ஜெயகாந்தன் வலம் வராத துறைகளே இல்லை என்பதற்குச் சான்றாக, சினிமா, நாடகம், இலக்கியம், அரசியல், படைப்புலகம் என, […]

Read more

பிரபலங்களின் குழந்தைப் பருவம்

பிரபலங்களின் குழந்தைப் பருவம், ப்ரியன், கலைஞன் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160. இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில், கவிஞர் வைரமுத்து, சுகிசிவம், டாக்டர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுகிறார்கள். இரண்டாம் பிரிவில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், சார்லி சாப்ளின், தமிழ்வாணன், வால்ட் எலியாஸ் டிஸ்னி போன்ற பிரபலங்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் பதிவாகியுள்ளன. நான்காம் பிரிவில் இயக்குநர் […]

Read more

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம்

jk ஜெயகாந்தன் வாதம் பிரதிவாதம், தொகுப்பு ஜெ.ஜெயசிம்ஹன், கலைஞன் பதிப்பகம், பக். 225, விலை 215ரூ. சுதந்திரத்திற்குப் பின் தன் படைப்புகளால் அதிகம் பேசப்பட்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். “நான் நானாக உருவானவன்” என்ற பிரகடனத்துடன்தான் அவரது எழுத்துக்கள் பலரின் மனதைத் தட்டியது. அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் என்று பல்வேறு துறைகளிலும் அவரது எழுத்துக்கள் ஆட்சி செய்தன என்ற போதும் எந்த இயக்கத்திற்கும் கட்டுப்படாமல் சுதந்திரப் பறவையாய், தன்னையே ஒரு இயக்கமாகக் கொண்டவர் ஜெயகாந்தன். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அவரது வெளிவராத கட்டுரைகள் பலவற்றை அவரது […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், விலை 165ரூ. கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு, மலேஷியாவில் வெளியிட்ட, 60 நூல்களுள் இந்நூலும் ஒன்று. இந்நூல் மகாபாரதத்துள் இடம் பெற்றுள்ள வரம், சாபம் குறித்த, 30 கதைகளைத் தொகுத்துக் கூறுகிறது. இது, மகாபாரதம் முழுமையாகப் படித்தறியாதவர்கள், அது குறித்து அறிந்து கொள்ளும்படியும், படித்தோர் என்னென்ன வரங்கள், என்னென்ன சாபங்கள் உள்ளன என, தொகுத்து நோக்கி இன்புறுவதற்கும் ஏற்ற வகையில் சுவை நிறைந்த சொல்லாடலில் அமைந்துள்ளது. வரங்கள் என்று நோக்கும்போது நாராயணன், உத்தங்கர், சஞ்சயன், […]

Read more

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ. தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த […]

Read more

மறுதுறை மூட்டம் (நாகார்ஜுனன் நேர்காணல்)

மறுதுறை மூட்டம், (நாகார்ஜுனன் நேர்காணல்), நேர்காணல் : எஸ். சண்முகம், நெறியாள்கை: முபின் சாதிகா, கலைஞன் பதிப்பகம், விலை 180ரூ. தமிழில் பின்நவீனத்துவம் காட்டிய எழுத்துக்களில், அதை அடையாளப்படுத்தியதில் நாகார்ஜுனனுக்கு பெரும் இடம் உண்டு. அவரது முழு நேர்காணலின் மூலம் துடிப்பும், அக்கறையும், பரந்துபட்ட அறிவும், சொல்லாடலின் செழுமையும் இந்த நூல் முழுமையும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு பிரச்னையிலும் அவர் கருத்து வைக்கும் இடம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. நாகார்ஜுனனின் வற்றாத உழைப்பும், மிகையற்ற மதிப்பீடுகளும், அகந்தையற்ற மனமும், மனிதநேய இழைவும் மிகவும் முக்கியமானவைகளாக இந்த நூலில் […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ். லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. மகாபாரத பாத்திரங்களை நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமை, நட்பு துரோகம் என அனைத்து செயல்களுக்கும் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள சில பாத்திரங்கள் – யயாதி முதல் விஸ்வாமித்திரர் வரை – பெற்ற வரங்களையும் சாபங்களையும் எளிய நடையில் கதைபோல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். ஏன் சாபம்? எதற்காக சாபம்? என்பதன் விளக்கம் படிக்கும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்து நீதியை போதிக்க் உதவும். […]

Read more
1 2 3