அகமும் புறமும்
அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, விலை ரூ. 80.
சொந்தத்தில் ஒரு வீடு என்பது பலருக்கும் கடைசிவரை நிறைவேறாத ஒரு கனவாகவே நின்றுவிடுகிறது. முறையான திட்டமிடல் இருந்தால் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது ‘ அகமும் புறமும்’ என்னும் இந்த நூல்! மிரட்டுகிற மின்சார வெட்டைக்கூடச் சமாளிக்கும் விதமான மாற்று வழிகளையும் விளக்குகிறார் ஆசிரியர். வீடு என்பதன் அடிப்படைத் தேவையே நல்ல வெளிச்சமும் காற்றும்தானே? வங்கிக் கடன்கள் காப்பீட்டு வசதிகள் எல்லாவற்றையும் விளக்குவது போலவே வீட்டைச் சுற்றிலும் பசுமையான சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் விளக்குகிறார். 1200 சதுர அடி நிலம் கிடைத்தால் போதும்; அழகாக ஓர் ஆதர்ச இல்லத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கு இந்தக் கையேடு உதவும். உலகில் எந்த மூலைக்குப் போனாலும் ‘எப்போது நம் வீட்டுக்குப் போவோம்’ என்று தோன்ற வேண்டும் என்பதை நூலாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பது, வீடுகட்ட விருப்புகிறவர்கள் கவனத்துக்கு உரியது. சுற்றிலும் 300 சதுர அடி இடம் விட்டு 800 சதுர அடி தடைத்தளத்தில் வீடு என்பது இவர் காட்டுகிற வழி. சுற்றிலும் உள்ள இடத்தில் வேப்பாமரம், தென்னை மரம் தவிர காய்கறிச் செடிகளையும் வைக்கலாம் என்பதைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பதினைந்து கட்டுரைகள்! வீட்டுக் கனவில் உள்ளவர்கள் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இது.
நன்றி-கல்கி (7.4.2013