இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-3.html இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும், பின்பும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி, புதிய தகவல்களைக் கூறும் நூல் இது. இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து, இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆராய்ந்துவிட்டு திரும்பிச் சென்றார். சிலுவையில் அறையப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு இந்தியா வந்து, வயதான காலம் வரை இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார். அவருடைய கல்லறை காஷ்மீரில் இன்றும் இருக்கிறது என்று கூறுகிறார் ஹோல்கர் கெர்ஸ்டன். 1981ல் இந்த புத்தகம் ஜெர்மனியில் வெளியிடப்பட்டபோது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. தமிழில் உதயகுமார் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 15/10/2014.
—-
மூன்றாம் பால், பினாகி பப்ளிகேஷன்ஸ், பொள்ளாச்சி, விலை 30ரூ.
காதல் வயப்பட்ட ஒரு இளைஞன் தன் இதயத்தில் பொங்கி எழும் எண்ணங்களை வெளியிட்டால் எவ்வாறு இருக்கும்? அதை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார் எம்.எஸ். சர்மா. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.