கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும்
கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் தொகுதி விலை 210ரூ. இரண்டாம் தொகுதி 220ரூ, மூன்றாம் தொகுதி 240ரூ.
கதைப்பாடல் என்பது கதைத் தழுவிய நிலையில் அமையும் பாடல் எனலாம். கதைப்பாடல் அதிகமாகக் கிடைப்பது தமிழகத்தில்தான். தமிழில் கதைப்பாடலை கதை, கும்மி, பாட்டு, போர், அம்மானை, காவியம், மாலை, குறம், தூது, மசக்கை, வெற்றி, சண்டை, ஏணிஏற்றம் எனும் பல பெயர்களில் வழங்கி வருகின்றன. கதைப்பாடலைப் பாமரரின் அறிவுச் சொத்து, புலமைக் காவியம், வாழ்வியற் கருவூலம், சமூகம் காட்டும் காலக்கண்ணாடி என்றெல்லாம் அழைக்கலாம். நாட்டின் வரலாற்றை அறுதியிடத் துணை செய்யும் கதைப்பாடல்களைத் திரட்டுவதும் பதிப்பிப்பதும் ஆய்வு செய்வதும் அவசியமான ஒன்றாகும். அதை செம்மைபடச் செய்து தமிழ் இலக்கியத் துறைக்கும், ஆய்வுத் துறைக்கும், சுவடிப் பதிப்புத்துறைக்கும் பெரும் பங்களிப்பு அளித்துள்ளார் முனைவர் சு. தாமரைப்பாண்டியன். இந்நூல் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதி விலை 210ரூ. இரண்டாம் தொகுதி 220ரூ. மூன்றாம் தொகுதி 240ரூ. நன்றி: தினத்தந்தி.