சிறுவாடு
சிறுவாடு, மாலிறையன் (இரா. கிருட்டிணமூர்த்தி), சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
மரபுக் கவிதை நூல்கள் அரிதாகி வருகிற இன்றைய நிலையில் பல விஷயங்களை பாடுபொருளாகக் கொண்ட சிறுவாடு கவிதை நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் மாலிறையன். பாடல்கள் அனைத்திலும் இயல்பான சந்தமும், அழகும் கொஞ்சுகின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றை நூல் முழுவதும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.
—-
காணாமல் போன கவிதைகள், தங்கத்தாய் பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 140ரூ.
பஞ்சபூதம், ஆறாம் அழிவு, இரக்கத்தின் சிலுவைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக நூலாக ஆசிரியர் நெப்போலியன் வடித்துள்ளார். ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு வித்தியாசமான அர்த்தமுள்ள செய்திகளை தெரிவிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.
—-
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006, சுரா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் மதிப்புக்கூட்டு வரிச்சட்டத்திற்கான விளக்கத்தை நூலாசிரியரும், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையருமான ம. கருணாகரன் தெளிவுப்படுத்தி உள்ளார். பதிவு, ரீபண்ட், அப்பீல், ரிட்டன் தாக்கல், வரி பிடித்தம், வரிச்சலுகை, ஐ.டி.சி. பெறுதல், சி.எஸ்.டி., ஒப்பந்தப்பணிகள் அடங்கிய மக்கள் சாசனமாக இது திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.