சுந்தர காண்டம்
சுந்தர காண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ.
இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகளான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஙனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்தபோது, ஜாம்பவனான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்துகொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார்.அதனால் உத்வேகமடைந்த அனுமன் கடலைத் தாண்டி இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து வெற்றியுடன் திரும்புகிறார். அசோகவனத்தில் சோகமே உருவாக இந்த சீதைக்கு, அனுமனைப் பார்த்த பிறகுதான் தனது எதிர்காலம் ஒளிமயமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது. அத்தகைய ஆற்றல்மிகு அனுமனின் அற்புத பணிகள் நிரம்பிய சுந்தரகாண்டம், எளிய விளக்கவுரையுடன் படைக்கப்பட்டிருக்கிறது.
—-
ஆயுளை வளர்க்கம் பிராண சிகிச்சைகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 65ரூ.
பிராண சிகிச்சை மூலம் நோய் தீர்க்கும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய நூல் இது. அலோபதி மருத்துவத்தில் உள்ள நவீன சாதனங்களை விடவும், மனித உடலின் அடிப்படைத் தன்மையைக் கொண்டு செயல்படும் பிராண சக்தி பரிசோதனை முறை அதிக நுட்பம் வாய்ந்தது என்று விளக்கியுள்ளார் ஆசிரியர்.
—-
ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மொழி பெயர்த்தவர்-மாத்தளை சோமு, தமிழ்க் குரல் பதிப்பகம், 10, புலிபோன் பஜார், 2வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை ரூ.180.
பேச்சு மொழியை வைத்து ஆதிவாசிகள் கூறிய கதைகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவை தொகுத்து மொழிபெயர்த்து இந்நூலில் தரப்பட்டுள்ளன. இதில் இருந்து ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் தெரிகின்றன. தமிழர் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இந்நூல் பயன்படும். நன்றி: தினதந்தி, 2/10/2013.