தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ.

விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.  

—-

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

பாரதநாட்டின் இரு பெரும் பண்பாட்டுச் செல்வங்களான ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களிலும், வால்மீகி, கம்பர் என்ற இரு மகாகவிகளின் இலக்கியப்பார்வையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 23/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *