இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.127; ரூ.50;  சாகித்திய அகாதெமியின் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் தமிழின் நவீன எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய இந்த நூல், அவருடைய வாழ்க்கை, எழுத்து குறித்த ஒரு சிறந்த அறிமுகம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அசோகமித்திரனின் அருகிலிருந்து அவரது எழுத்தையும் வாழ்க்கையையும் எழுத்தாளராகவும் நண்பராகவும் கண்டுள்ள சா.கந்தசாமி, இந்நூலை எழுதியிருப்பது மிகப் பொருத்தம். அசோகமித்திரன் எழுத்துலகம் தனித்துவமானது. சிறுகதை, நாவல் என புனைகதை வடிவ எழுத்தில் அவர் பெரும் வெற்றி பெற்றவர் என்பதில் […]

Read more

அல்லிக்கேணி

அல்லிக்கேணி,  ராம்ஜீ நரசிம்மன்,  எழுத்து பிரசுரம், பக். 249, விலை ரூ. 270.   திருவல்லிக்கேணியின் காட்சியமைப்பை நம் முன் நிறுத்துவதில் தொடங்கி கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் வாழ்க்கையின் பரிமாணங்களை இந்நாவல் விவரிக்கிறது. நாம் நமது பால்ய பருவத்தில் விரும்புகிற ஒவ்வொரு சாகசத்தையும் அதனைத் தொடர்ந்து அடையும் பருவ மாற்றத்தையும் தன் எழுத்தில் சலிப்பு இல்லாமல் கொண்டு வந்து தந்திருக்கிறார் எழுத்தாளர் ராம்ஜீ நரசிம்மன். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் எட்டிப்பார்க்கும் நையாண்டித் தனம் வாசகர்களைக் கட்டிப்போட்டு அழைத்துச் செல்கிறது. தேர்ந்த கதையமைப்பு, நேர்த்தியான கதாபாத்திரங்கள், […]

Read more

திருப்புகழ்த் திருத்தலங்கள்

திருப்புகழ்த் திருத்தலங்கள், ஆ.கோமதி நாயகம், அழகு பதிப்பகம், விலைரூ.350 மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள், முருகன் தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் வரலாற்றோடு மாவட்டங்கள் தோறும் இத்தலங்கள் அமைந்துள்ள விபரமும் அடங்கி இருக்கிறது. முருகனுக்கு உரிய மந்திரங்கள், யந்திரங்கள், விரதங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030996_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

எத்தனை கோணம் எத்தனை பார்வை

எத்தனை கோணம் எத்தனை பார்வை, சீத்தலைச்சாத்தன், ஒப்பிலாள் பதிப்பகம், விலைரூ.99. கவிஞர் கண்ணதாசனின் பார்வைகள் பற்றி ஐந்து தலைப்புகளில் மிளிரும் நுால். கண்ணதாசனின் அனுபவங்களும் பளிச்சிடுகின்றன. என்ன துணிச்சல், யாருக்கு வரும் இந்தத் துணிச்சல், மணவிழாப் பாட்டு கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இறந்த பின் இறுதி ஊர்வலத்தில் பாட, 1966ல் எழுதிய மரண சாசனம், ஏழு பாடல்களில் எழுதியுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான தகவல்களைத் தருகிறது. – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275 வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள், மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம், வானதி பதிப்பகம், விலைரூ.125. அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான் இறைவன். உடல் சார்ந்த நோய்களுக்கு, உள்ளம் சார்ந்த இறை நம்பிக்கை மருந்தாக அமையலாம் என உணர்த்துகிறது நுால். நாயன்மார்களுடன் இறைவன் நடத்திய திருவிளையாடல்களின் சுருக்கமே என கூறியுள்ளது, உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது, திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தது, பரவையார் வீட்டிற்குத் துாது போனது, திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கொடுத்து சிவநெறிக்கு மாற்றியது […]

Read more

தங்கையின் அழகிய சினேகிதி

தங்கையின் அழகிய சினேகிதி, குரு அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.200 சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை வழங்குகிறது. அண்ணனும், தங்கையும் எப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருப்பர் என்பதைத் தெரிவிக்கும், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ என்னும் கதையில், காதலை மையமாக வைத்துக் குடும்பச் சூழலை பின்னிக் காட்டியிருக்கிறார். திருமண பந்தத்திற்கு முன் காதல் என்னும் ஈர்ப்பு, பலரது வாழ்க்கையில் புகுந்து வெளியேறியிருக்கும். அந்த ஈர்ப்பு, படுக்கை வரைக்கும்கூட இழுத்துச் சென்றிருக்கும். அந்தக் காதலில் பிரிவு […]

Read more

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்,  அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், விலைரூ.150 திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும் திருத்தலமாகத் திருப்பட்டூர் ஈசன்; திருமணத்தை நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி; பல நோய்கள் தீர்க்கும் பல திருத்தலங்கள்; ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலங்கள்; கடன்தொல்லைகளை தீர்க்கும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் என்ற சிறப்பானதொரு தகவல். இழந்த பதவி கிடைக்க அச்சிறுபாக்க ஆட்சி புரீஸ்வரர் திருக்கோவில்; திருமணத் தடைகள் நீக்கும் திருவிடந்தை பெருமாள்; சனி […]

Read more

அந்த விளக்கின் ஒளி பரவாதது

அந்த விளக்கின் ஒளி பரவாதது, அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50 குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் […]

Read more

விண்ணளந்த சிறகு

விண்ணளந்த சிறகு, சு. தியடோர் பாஸ்கரன், இந்து தமிழ் திசை. இந்து தமிழ் உயிர்மூச்சு’ இணைப்பிதழில் சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’. சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடர் கவனப்படுத்தி, வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது அந்தக் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கை பெருமளவு சீரழிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலை இந்த நூல் மேம்படுத்தும். நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030605_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 2 3 4 8