சுத்தம் சுகம் தரும்

சுத்தம் சுகம் தரும், ஆர்.ஜான்ராபர்ட், ஜான்சன் பதிப்பகம், விலைரூ.80. சுகாதாரம் பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘சுகாதாரம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் துவங்குகிறது. சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்படுகிறது. அடுத்து, ‘உணவுப் பழக்கமும் சுகாதாரமும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. உணவுக்கு உள்ள முக்கியத்துவம் இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து, ‘வீட்டினுள் சுகாதாரம்’ என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இந்நுாலில் அடங்கியுள்ளன. – மலர் […]

Read more

அஞ்சலட்டை கதைகள்

அஞ்சலட்டை கதைகள், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலைரூ.90. ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக இருப்பது எவ்வளவு உற்சாகம் தரவல்லது என்பதை உணர்த்தும் அற்புத அடையாளம். அதில் எழுதிய அனுபவம் பற்றிய நுால்.அஞ்சலகத்தில், ஒவ்வொரு முறையும் நுாறு அஞ்சலட்டைகளை வாங்குகிறார் ஆசிரியர். எதுவும் எழுதப்படாத அதன் மவுனத்தை, மணிக்கணக்கில் பார்த்துச் சிலாகிக்கிறார். பின்னொரு நாளில், அதில் கடிதம் எழுதுகிறார். பதில் இல்லை. ஆயிரம் கதை சொல்லும் அஞ்சலட்டையில், ஒரு குறுங்கதை எழுதினால் என்ன எனத் […]

Read more

கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம்

கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம், டாக்டர் வி.எஸ்.நடராஜன், வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலைரூ.120. முதியோர் நலத்தில் அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள நுால். வயது முதிரும் போது ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை எளிய நடையில் கேள்வி பதில் பாணியில் விளக்குகிறது. இந்த நுாலில், 22 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதய நலம், நீரிழிவு நோய், மூட்டு எலும்புகளின் நலம் என உடல் உறுப்புகளை தனித்தனியே சுட்டி, அவற்றை பேணும் வழிமுறைகளை எழுதியுள்ளார். முதுமை பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. […]

Read more

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும், மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ, தமிழில்: சுஜாதா ராஜகோபால்; கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், பக். 48; விலை ரூ.80; ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் ‘ஹோரன்’ எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை ‘கோதெ’வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. இந்தக் கதையில் வரும் […]

Read more

சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more

சின்ன அரும்பு மலரும்

சின்ன அரும்பு மலரும், கவிஞர் சுபஸ்ரீ சுப்ரமணியம், சுபஸ்ரீ பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் பாட ஏற்ற வகையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ள சந்தப் பாடல்களின் தொகுப்பு நுால். மிகச் சாதாரணமான பொருள்களில் பாடப்பட்டுள்ளன; அனைத்திலும் சந்தம் பொதிந்துள்ளன. உற்சாகமாக பாட ஏற்ற வகையில் உள்ளன. பாடல்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளின் முன் இனிமையாக பாடி கற்றுக் கொடுத்து அறிவூட்ட உதவும் நுால். – ஒளி நன்றி: தினமலர், 6/3/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125 . பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை […]

Read more

அன்பின் வழியது உயிர்

அன்பின் வழியது உயிர் (லியோ டால்ஸ்டாய் சிறுகதைகள்), ஜெ.நிர்மலா, மாசிலாள் பதிப்பகம், பக்.116, விலை ரூ.150. ரஷிய இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நுகர்வுக் கலாசாரத்தில் மறந்துபோன, மரத்துப்போன மனித நேய மதிப்பீடுகளை மறுபதிவு செய்ய வேண்டும் என்ற நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக கதைத் தேர்வுகள் அமைந்துள்ளன. நன்னயம் செய்துவிடல்’ என்ற கதையில், செய்யாத கொலைக்கு இவான்அக்செனோவ் என்பவன் தண்டிக்கப்பட்டு சைபீரியச் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு, உண்மையான குற்றவாளி மக்கர் செமனீச் என்பவனை காண […]

Read more

ஆகவமல்லன்

ஆகவமல்லன், ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், விலைரூ.100. வீரம், காதல், பகை இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மூன்று நாடகங்கள். மூன்றிலும் முக்கியமாக பொறாமைதான் மையப்புள்ளி. சோழஎதிரியை வீழ்த்த தன்னையே பகடைக்காயாக ஆக்குகிறார் ஒரு பெண். அவள் மையலில் விழுந்த ஆகவ மல்லன் தன் சொந்த மகனையும் எதிர்த்து என்ன ஆனான் என்பதை சொல்கிறது. கவி காளிதாசனை மணப்பதற்காக காதலியை பலிகடா ஆக்கிய பெண்ணை ‘தாய்வீடு’ நாடகமும் நன்கு படைக்கப்பட்டுள்ளது. கணவனைக் கொன்றவனை பழி வாங்க காத்திருந்த பெண், அந்தப் பகைவனாலேயே தன்மானம் காத்த […]

Read more

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல், கவிஞர் ஒளவை நிர்மலா, விழிச்சுடர் பதிப்பகம், விலைரூ.300. ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின் சமுதாயக் கட்டமைப்பு, அரசியல் நிர்வாகம், நீதி நெறிகள், குடும்ப உறவுகள், விளையாட்டுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், விழுமியங்கள் மேற்கோள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டு உள்ளன. குடிமக்கள் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தியதை சீவகசிந்தாமணி கூறுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது வரி வேண்டாமென, திறை விலக்கு அளித்து உள்ளான். கோவில் […]

Read more
1 5 6 7 8