மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும்,  தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை: ரூ.95. மருத்துவத்துக்கும் காந்திக்குமான உறவையும் அதில் அவருடைய ஈடுபாட்டையும் விளக்கும் வகையில், மருத்துவத் துறை நிபுணர்கள், காந்தியர்கள் உள்ளிட்டோர் எழுதிய 20 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. காந்தியரும் சமூகச் செயல்பாட்டாளருமான மறைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் இந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 9-4-22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

ரஸப் தய்யிப் எர்டோகன்

ரஸப் தய்யிப் எர்டோகன், கே.எம்.அஷ்ரப் கீழுபரம்பு, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலைரூ.170. துருக்கியின் தொன்மத்தையும், அரசியல் மாற்றங்களையும், ஆற்றல்மிகு ஆட்சியாளராக விளங்கிய ரஜப் தய்யின் எர்டோகன் ஆட்சித் திறனையும் விளக்கும் நுால். மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு துருக்கியின் பண்பாடும் பாரம்பரியமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. உஸ்மானிய ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய பாணியிலான ஆட்சியைக் கொண்டு வருவோம் என முழங்கிய, முஸ்தபா கமால், இஸ்லாமியருக்கு எதிராக சட்டங்களை இயற்றியதை விரிவாக விளக்குகிறது. துருக்கியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், ரஜப் தய்யிப் எர்டோகன் […]

Read more

சுவாசிக்கும் பூக்கள்

சுவாசிக்கும் பூக்கள்,  முனைவர் பொ.பொன்முருகன், பயணம் பதிப்பகம், விலை:ரூ.250. ஏ ராளமான பூக்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட பல பூக்களின் முழு விவரத்தை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு பூக்களின் மருத்துவ குணங்கள், பூஜைக்கு உகந்த மலர்கள், பெண்கள் விரும்பும் பூக்கள், பூக்களின் ஆங்கிலப் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களுடன் பூக்களின் படங்களும் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி,  முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை:ரூ.480. 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை தமிழில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை இந்த நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக் கின்றன. இந்த 10 ஆண்டுகளில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விளக்கமான குறிப்பும், அந்த நூல்ககளுக்கு பல்வேறு இதழ்களில் வெளியான மதிப் புரையும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஆய்வு […]

Read more

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள்

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள், நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், விஜய இராஜேஸ்வரி பதிப்பகம், விலை:ரூ.150. உன்னதமான வாழ்க்கைக்கு வழிகாட்டிபோல இந்த நூல் அமைந்து இருக்கிறது. நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், அவரது சிந்தனையில் உதித்தது, பல மேடைகளில் தெரிவித்த கருத்துகள், பல்வேறு அனுபவங் களில் இருந்து கற்றுக் கொண்டது, படித்து அறிந்தவை ஆகியவற்றைத் தொகுத்து 36 கட்டுரைகளாகக் கொடுத்து இருக்கிறார். ஒவ்வொன்றும் சிறப்பான கருத்தைத் தாங்கி இருப்பதுடன், படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்போது வேண்டுமா னாலும் சாய்ந்துவிடலாம் என்பது போன்ற […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள்

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள், தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.550. பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே என்ற தமிழ் நாவல்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். வடிவுடை நம்பி, கெண்டைவிழி என்ற பாத்திரங்களுடன் துவங்குகிறது பதினான்காவது மாடி. கொள்ளையை சாதாரணமாகச் செய்த வடிவுடைநம்பி, மீண்டும் ஒரு திருட்டில் ஈடுபட போலீஸ் கமிஷனர் கேட்பதில் மர்மம் துவங்குகிறது. இரண்டு பாத்திரங்களுடன் சாந்தோமில் துவங்குகிறது, 7:30 மணி எக்ஸ்பிரஸ் நாவல். பேரின்பத்திற்காக, மெரினா உணவகத்தில் […]

Read more

மனித தெய்வம்!

மனித தெய்வம்!, கே.சித்தார்த்தன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.160. சில நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். சில நடிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். இது படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகம். பாடல்களும் உண்டு. வழக்கமான கதை தான் என்றாலும் காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டி எழுதியிருக்கிறார். காதலித்தவனை மணக்க முடியவில்லை. காதலித்தவனை இன்னொருத்தி மணப்பதற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார். நாடகத்தை காட்சி அமைப்பு, நடிகர்களின் பட்டியல் என 50 காட்சிகளாக எழுதி இருப்பது சிறப்பு. எத்தனை பேர் நடிக்கத்தேவை; அதில் எத்தனை பெண் பாத்திரங்கள் என்ற விளக்கக் குறிப்பு சிறப்பாக […]

Read more

தடம் மாறும் வயது

தடம் மாறும் வயது, ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.120. பெண் – ஆண் உறவு நிலை ஒழுக்கநெறிகளை 30 அத்தியாயங்களில் வலியுறுத்தும் நுால். ஆண்கள் மத்தியில் பெண்கள் சமமாக இருக்கும் நிலையில், இரு பாலினத்தாரும் அடக்கி ஆள முற்படுவர். இந்நிலையில், ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, இருவரும் படைப்பில் சமம் என்றாகிறது. அன்பு, பொறுமை, பக்குவம், கவனம், நிதானம், விவேகம், நேர்மை இவற்றின் மொத்த வடிவம் தான் ஒழுக்கம். அதை முழுமையாக வசப்படுத்தி வாழ்வதை வாழ்க்கை என்றும், […]

Read more

தமிழரின் தோற்றமும் பரவலும்

தமிழரின் தோற்றமும் பரவலும், புலவர் கா.கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.120. சென்னைப் பல்கலைக் கழகத்தில், வி.ஆர்.ராமச்சந்திர தீட்ஷிதர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். இவர், 1940 நவம்பர் 29, 30ம் தேதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவே நுால் வடிவம் பெற்றுள்ளது. அது தமிழாக்கம் பெற்றுள்ளது. பழந்தமிழ் நாகரிகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் என்னும் தலைப்பில், ‘திராவிடர்கள், தென் இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது’ என்று கூறுகிறது. குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட […]

Read more

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், விலைரூ.180. கோவிட் – 19 தோற்றம், வளர்ச்சி, உலகை விழுங்கிய மரண விபரங்கள், தொடரும் அவலங்களை அளந்து காட்டும் நுால். கடந்த 1918ல் வந்த, ‘ஸ்பேனிஷ் ப்ளூ’ பெருந்தொற்றால் ஐந்து கோடி பேர் மாய்ந்தனர். பின் வந்த கொரோனா வைரசால் பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கூறியுள்ளார். வைரஸ் சீனா ஊகானிலிருந்து வந்தது என்பது ஊகமா, உண்மையா, ஜப்பான் அணுகுண்டு போல், கொரோனா அணுகுண்டும் பாதிப்பு தருமா, தடுப்பு ஊசி அலாவுதீனின் அற்புத விளக்கா, உயிரியல் […]

Read more
1 3 4 5 6 7 8