நாலடியார்

நாலடியார், புலியூர் கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 208,விலை 120ரூ.

திருக்குறளோடு ஒத்த சிறப்புடைய நூல் நாலடியார் என்பதை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழந்தொடர் உணர்த்துகிறது. பதினென்கீழ்கணக்கு என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்றான இந்த நூல் நல்லொழுக்கம், பொறுமை, முயற்சி நட்பு போன்ற வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நீதி நூல். அறன் வலியுறுத்தல், ஈகை, கல்வி, பெருமை, மானம், சுற்றந்தழால், நட்பு ஆராய்தல் முதலிய பல அதிகாரங்கள் திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளாகவே அமைந்துள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பிரிவுகள் உள்ளன. நான்கடி வெண்பாக்கள் நானூறு உள்ளமையால் இந்நூலுக்கு நாலடி நானூறு என்ற பெயரும் உண்டு. வாழ்க்கைக்குப் பயன்படும் கருத்துக்களைக் கூறும் இந்த நூலிலுள்ள 400 செய்யுள்களுக்கும், புலியூர் கேசிகன் விளக்கவுரை எழுதியுள்ளார். பல நூல்களுக்கும் உரை கண்ட அவருடைய உரை சிறப்பாக அமைந்துள்ளது. மாணவர்களும், மற்றவர்களும் படித்து, வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்நூல் உதவும். பேரா. ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 16/2/2014.  

—-

 

மவுனமும் மணிமுடியும், வைகறை, பொன்னி, 2/178, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 200ரூ.

கருத்துரிமை, மனித உரிமை, சுதந்திரம் போன்ற கருத்துகளை வலியுறுத்தி பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார், வைகறை. கட்டுரை ஒவ்வொன்றிலும் தனது கருத்துகளை உறுதியோடு வலியுறுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைக்க இட்டுச் செல்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *