அய்ந்தைந்தாய்

அய்ந்தைந்தாய், க.பன்னீர்செல்வம், பரத் புக்ஸ், விலை 115ரூ. ஐங்கர விநாயகர், பஞ்ச சக்திகள், ஐந்து வகை நந்திகள், ஐந்தெழுத்து மந்திரம், இறைவனின் ஐந்தொழில், திருமாலின் ஐந்து படைகள், சிவனின் ஐந்து சபைகள் இப்படி ஐந்துடன் கூடிய அரிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும்

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும், வே.ராஜேஸ்வரி, ஷாந்து பதிப்பகம், விலை 200ரூ. முனைவர் பட்டத்துக்காக நூலாசிரியர் ‘சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 7 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதில் வடமொழியில் எழுதப்பட்ட ஆதிசங்கரரின் சவுந்தரியலகரியும், அதன் மொழிபெயர்ப்பான வீரகவிராச பண்டிதர் எழுதிய சவுந்தரியலகரியும் மொழிபெயர்ப்பு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டு பல தகவல்களை நூலாசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம், தமிழில் ரஷீத் ஹஜ்ஜுல், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 150ரூ. இஸ்லாத்தின் தன்னிகரில்லாத கொள்கைகளையும், நடைமுறைகளையும் குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. இஸ்லாத்தின் விஷயதானங்களை அவற்றின் இயல்புகளோடு உள் வாங்கி எளிமையாகவும், அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் குழப்பங்கள் தெளிவடையும். சந்தேகங்கள் நீங்கும். அன்பு, சகோதரத்துவம் வளரும், புரிந்துணர்வுகள் அதிகரிக்கும். இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்கள் அகலும். இந்த அடிப்படையில், இஸ்லாமிய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்தும் வகையில் அற்புதமான வழிமுறைகளை அல்லாமா யூசுப் […]

Read more

காந்தி வழியது உலகம்

காந்தி வழியது உலகம், பேராசிரியர் இராம் பொன்னு, சர்வோதையா இலக்கியப் பண்ணை, விலை 150ரூ. அகிம்சை வழியில் போராடி, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் அடிச்சுவட்டில், அமைதியான முறையில் தங்கள் நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை அனுபவித்தவர் மாண்டேலா. அவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளத்தை உருக்குகிறது, மற்றும் மார்டின் லூதர்கிங், தலாய்லாமா, “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான் உள்பட மொத்தம் 8 […]

Read more

மாறுமோ தமிழக வறட்சி நிலை?

மாறுமோ தமிழக வறட்சி நிலை?, ச. அரிகரபுத்ரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 60ரூ. நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் நாட்டு நலன், மக்கள் நலன், மொழி நலன், சிந்தனை ஆற்றல்கள் காணப்படுகிறது. பெண் குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலம் கண்டு ஆசிரியரின் உள்ளக்குமுறல் வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

நாடக இசைக் களஞ்சியம்

நாடக இசைக் களஞ்சியம், சங்கரதாஸ் சுவாமிகள், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, விலை 330ரூ. நாடக இசைக் களஞ்சியம் என்ற மையக்கருத்தை முன்னிறுத்தி முழுமையாக எழுதப்பட்ட நூல். இதில் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் கூறியுள்ள இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய 2 தனிப்பண்புகளும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் நாடகத் தமிழ் குறித்தும், நாடகத்திற்கான இசையின் பங்களிப்பு குறித்தும், இயல், இசை, நாடக அறிஞர்களிடமும், ஆய்வாளர்களிடமும், புதிய சிந்தனைகளையும், தேடுதல்களையும் இந்த நூல் உருவாக்கியுள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சிரிக்கவும் சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவும், இலங்கை ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. இலங்கையைச் சேர்ந்த ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், நகைச்சுவையாக எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் அடங்கிய புத்தகம் இது. சிறுவர் நகைச்சுவைக் கதைகள், கணவன் – மனைவி கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், ஒரு பக்கக் கதைகள்.. இப்படி பல வகையான கதைகள் இதில் அடங்கியுள்ளன. சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

கூவாய் குறளே

கூவாய் குறளே, உரை தமிழறிஞர் க.ப.அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 120ரூ. திருக்குறள் அதிகார எண் 71 முதல் 80 வரை வானொலியில் தமிழறிஞர் க.ப.அறவாணன் உரை நிகழ்த்தினார். அந்த உரையே “கூவாய் குறளே” என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்பையும், திருக்குறள் காட்டும் பாதையை விட்டு விலகிச் சென்ற மக்களின் போக்கையும் அறவாணன் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளை நுட்பமாக ஆராய்ந்து, அவர் எபதியுள்ள உரையைப் படிக்கும்போது, திருவள்ளுவரே நேரில் நின்று பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள்

இன்றைய பிள்ளைகளுக்கான வளர்ப்பு முறைகள், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 50ரூ. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்த்தால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று இந்த நூலில் விளக்கியுள்ளார், உளவியல் நிபுணர் நளினி சந்திரசேகரன். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

காமராஜர் ஓர் மகாத்மா

காமராஜர் ஓர் மகாத்மா, டாக்டர் தேனி அ. ஈஸ்வரதாஸ், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 75ரூ. “படிக்காத மேதை” என்றும், “தமிழகக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர்” என்றும் போற்றப்படுபவர் காமராஜர். அவர் முதல் – அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் நடத்தி சாதனை புரிந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் தேனி அ.ஈஸ்வரதாஸ். காமராஜர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more
1 342 343 344 345 346 505