தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, […]

Read more

மகாகவி தாந்தே: விண்ணோர் பாட்டு

மகாகவி தாந்தே: விண்ணோர் பாட்டு, (மூன்று தொகுதிகள்), தமிழில்: கே.சுப்பிரமணியன்,  விடியல் பதிப்பகம், மொத்த விலை: ரூ.750 தாந்தேவைத் தமிழிலும் கொண்டாடுவோம் உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவர் இத்தாலியின் தாந்தே. அவரது நினைவின் 700-வது ஆண்டு செப்.13 தொடங்கி இந்த ஆண்டு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, உலகின் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான அவரது ‘ட்வைன் காமெடி’ மறுவாசிப்புக்கு வந்திருக்கிறது. 1307-ல் தொடங்கி 1320-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்தக் காப்பியத்தைத் தமிழில் முழுவதுமாக விரிவான விளக்க உரைகளுடன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கே.சுப்பிரமணியன். பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற […]

Read more

குறள் அமிர்தம்

குறள் அமிர்தம், திருக்குறளின் மெய்ப்பொருள், கோ.திருமுருகன் (எ) பூர்ணாநந்தன், வைதேகி பதிப்பகம், விலை  ரூ.800. அதிக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் ஒன்று என்ற பெருமையப் பெற்றது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். பலரும் வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கும் உலகியல் நூலாகவே அதனை அணுகியுள்ளனர். ‘ஜீவ அமிர்தம்’ என்னும் சித்தர் மரபு இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவருபவரும் ‘ஞான அமிர்தம்’, ‘ஜீவ அமிர்தம்’ உள்ளிட்ட சித்தர் நூல்களை எழுதியவருமான கோ.திருமுருகன் இந்த நூலில் 1,330 குறள்களுக்கும் மெய்ப்பொருள் விளக்க […]

Read more

தமிழகம்

தமிழகம் – கி.பி. முதல் நூற்றாண்டு,ந.சி.கந்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், பக்.25, விலை  ரூ.250. தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றை பல்வேறு அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, ஏற்புடையனவற்றைத் தொகுத்து அவற்றோடு தனது முடிவுகளையும் இணைத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர். அற்றை நாளில் தமிழ்நாட்டின் எல்லைகள், தமிழ்நாட்டில் பயின்ற மொழிகள், பின்னர் தமிழினின்றும் கிளைத்த வழிமொழிகள், தமிழில் முத்தமிழ் வளர்ந்த விதம், தமிழர் நாகரிகம், நம்பிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றையும், தமிழர், ஓவியம், சிற்பம், வணிகம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் […]

Read more

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்)

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்) , உரையாசிரியர்: கரு.முத்தய்யா, முதல் பாகம், பக்.384,  விலை ரூ.300, இரண்டாம் பாகம்,  பக்.384, விலை ரூ.300. தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று போற்றப்படுபனவற்றில் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று நூல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. மணிமேகலை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா. அவரைத் தொடர்ந்து வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோரும் உரையெழுதிப் பதிப்பித்தனர். அந்த வகையில் மணிமேகலைக்கு செறிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ள நூல் இது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறந்த சீர்திருத்த நூல் […]

Read more

திருக்குறள் சிறப்புரை

திருக்குறள் சிறப்புரை, இரெ.குமரன், மின் கவி, பக்.864, விலை ரூ.800. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இருந்து இந்நூல் வேறுபட்டுக் காட்சி அளிக்கிறது. எளிமையாகப் புரிந்து கொள்ளும்வகையில் ஒவ்வொரு குறளுக்கும்நூலாசிரியர் எழுதிய தெளிவான உரை இடம் பெற்றிருக்கிறது.அதுமட்டுமல்ல,அதோடு இரு வரிக் குறளின் பொருள் – அதன் சாராம்சம் – ஒரு வரியில் கூறப்பட்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக, “தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ என்ற குறளுக்கு அதற்குரிய விரிவான உரையோடு, ” நாவடக்கம் இல்லான் சொல்லால் கொல்வான்’ என்று ஒரு வரியில் […]

Read more

வல்லமை சேர்

வல்லமை சேர் , ரவி கண்ணப்பன், தி ரைட் பப்ளிஷிங், பக்.146, விலை ரூ.140. மனிதனின் எண்ணவோட்டங்களை ஊக்குவித்து, அதன் மூலம் குடும்பத்தில், சமுதாயத்தில் மாற்றங்களை, ஏற்றங்களை அடையச் செய்ய பல சான்றோர்கள் புத்தகங்கள் மூலம் வழி காட்டியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த நூலின் ஆசிரியர் இந்நூல் மூலம் விவசாயம் சார்ந்த சிந்தனை விதையைத் தூவியிருக்கிறார். ஒருவருடைய வலிமையான சிந்தனை சமூகத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் தன்மை படைத்தது. நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருந்தால், அது […]

Read more

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும், சொ.சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. 12-ஆம் நூற்றாண்டில் ஒளவையாரால் எழுதப்பட்ட ஆத்திசூடியையும், இருபதாம் நூற்றாண்டில் பாரதியாரால் எழுதப்பட்ட புதிய ஆத்திசூடியையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஒளவையார் ஆத்திசூடி மூலமும் உரையும் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் ஒவ்வொரு வரிக்கும் பொருளுரை, விளக்கவுரை, மேற்கோள் பாடல்கள் என பலவும் தரப்பட்டுள்ளன. ஒளவையாரின் ஆத்திசூடி நூலுக்கு முன்னோடியாய் அமைந்தது ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட “முதுமொழிக் காஞ்சி; (ஓரடிப் பாடல்களைக் […]

Read more

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,  பதிப்பாசிரியர்: ப.முருகன், வெளியீடு: தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, பக்.644, விலை ரூ.300. “தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்து இதுவரை 90க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தொடர்ந்து “தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதப்பட்டு வருகிறது. கா.சு.பிள்ளைதான் முதன்முறையாக தமிழ் இலக்கிய வரலாற்றை முழுவதும் எழுதினார் (1930). இவருக்குப் பின்னர் மு.வரதராசனார், சி.பாலசுப்பிரமணியன், பூவண்ணன், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலமும் போன்றோர் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, “புதிய நோக்கில்’ தமிழண்ணலும், “வகைமை’ நோக்கில் பாக்கியமேரியும், “வினா-விடை’ நோக்கில் இரா.விஜயனும், “எளிய முறையில்’ […]

Read more
1 2 3 4 5 56