செவ்வி

செவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தி இந்து, 12/8/2017.

Read more

‘இந்து’ தேசியம்

‘இந்து’ தேசியம், தொ. பரமசிவன், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிராக… தொ. பரமசிவனின் இந்த நூல், கடந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் சந்தித்த தத்துவப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான ஒற்றைக் கலாச் சாரத்தையும் அதன் பின்னணியில் உள்ள சக்திகளையும் எடுத்து இழைஇழையாக அலசும் கட்டுரைகள், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்நாள் போராட்டங்களின் அடிநாதத்தை வலுவாக எடுத்துக்கூறுகின்றன. இன்றைய சமூக, அரசியல் சூழ்நிலையைத் தமிழ்ச் சமூக மரபின் பின்னணியில் அலசி ஆராயும் இந்நூல் […]

Read more

செவ்வி

செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பரப்பில் அறிவார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், சரியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன். மரபின் வேர் பிடித்து நம்மை அழைத்துச் செல்பவர். அவரின் 14 நேர்காணல்கள் இடம்பெற்ற தொகுதி இது. 144 பக்கங்களுக்குற் செறிந்த உலகத்திற்குச் செல்வது சாத்தியமாகிறத, நம்முன்னோர்கள், சாதிகள், திராவிடக் கருத்தியல், தமிழர் பண்பாடு, பகுத்தறிவு, சீர்திருத்தம், தமிழ் தேசியம் என பரந்துபட்ட பரப்பிற்குள் மூழ்கி எழுகிற எத்தனிப்பு. மேலோட்டமாக எதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more