மோர் + ரசம் = முன்னேற்றம்

மோர் + ரசம் = முன்னேற்றம், கவி.முருகபாரதி, யோசி பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. மோர் + ரசம் = முன்னேற்றம்’ என்ற வித்தியாசமான தலைப்பை தந்துள்ள நுாலாசிரியரின் சிந்தனையே, இந்நுாலின் முதல் சிறப்பு. எந்த செயலையும், ஆர்வத்துடனும், சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை, அறிஞர்கள் பலரின், பொன்மொழிகளை மேற்கோள் காட்டி எடுத்துரைத்துள்ளது மேலும் சிறப்பு. டீ குடிப்பது குறித்து, ஆசிரியர் எழுதியிருக்கும் விஷயம், ‘இதில் கூட இவ்வளவு ரசனை மிக்க அம்சங்கள் உள்ளனவா?’ என, […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more