முகநூல் பதிவுகள்

முகநூல் பதிவுகள்,  பெ.சுபாசுசந்திரபோசு,  சிந்தியன் பதிப்பகம், பக்.192; விலை ரூ.200. முகநூல் பதிவுகளாக இருந்தாலும் நூலாசிரியர் கூறியுள்ளபடி இந்நூல் தமிழ் மொழி முதல் பசிபிக் கடற்கரை வரை நம்மை அழைத்துச் செல்கிறது. அமெரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள், சிங்கப்பூர் பற்றிய செய்திகள், ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள் என நூலின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. நாமறியாத பல தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.தமிழ்நாட்டில் புனித மரமாகவும், வழிபாட்டு மரமாகவும் இருப்பது அரச […]

Read more

கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ

கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்கங்கள் 304, விலை 145ரூ. 1780ஆம் அணடு சென்னைக்கு ஒரு படை வீரராக இங்கிலாந்திலிருந்து வந்தவர் தாமஸ் மன்றோ. பின்பு அவர் கமாண்டராக, கலெக்டராக, கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுகைக்குட்பட்ட சென்னை ராஜதானியின் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளைப் பற்றி அலண்டனில் இருந்த அவருடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதினார். அவற்றில் உள்ள தகவல்கள் அவர் காலத்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. தாமஸ் மன்றோவின் கடிதங்களின் அடிப்படையில் […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி […]

Read more