கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ. மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் […]

Read more

சினிமாவும் நானும்

சினிமாவும் நானும், இயக்குநர் மகேந்திரன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-9.html தமிழ் சினிமாவின் என்றுமே உதிராத பூ, இயக்குநர் மகேந்திரன். அவரது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் வருங்கால, நிகழ்கால இயக்குநர்களை வழிநடத்தும் கலைப் புத்தகங்கள். ஒரு கற்பனைக் கதையை யதார்த்த பாணியில் படம் ஆக்குவது என்ற மகேந்திரனின் விதைதான் இன்று பல்வேறு வெற்றிப் படங்களின் விருட்சமாக ஆகி இருக்கிறது. வசனத்தை மென்மையாக ஆக்கி காட்சிப்படுத்துதலை அதிகமாய் பயன்படுத்திய மகேந்திரனுள் எப்போதும் […]

Read more

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது, எஸ்.என். நாகராஜன், கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. கம்யூனிஸத்தைத் தத்தவார்த்த நோக்கில் அணுகிப் படிப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய பெயர், எஸ்.என். நாகராஜன். தமிழகத்தில் வாழும் மார்க்சிய ஆய்வாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் எஸ்.என்.என். நடத்திய மார்கசியம் இன்று என்ற இதழ் மூலமாகத்தான் இன்றுள்ள பலரும் மார்க்சியத்தை உணர்ந்துகொண்டார்கள். மார்க்சியத்தையும் வைணவத்தையும் சேர்த்து சுண்டவைக்கும் காரியத்தை எஸ்.என்.என். செய்திருந்தாலும் மார்க்சிய மூலத்தை தமிழகத்தில் அவர் விதைத்ததை, […]

Read more

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,

புரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும், ப.கு.ராஜன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 545. அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால் அதற்கு மேலாக எளிமைப்படுத்த முயற்சி செய்யக்கூடாது என்று எழுதினார் ஐன்ஸ்டீன். புரட்சியில் பகுத்தறிவு என்ற புத்தகத்தில் ப.கு.ராஜன் அதைச் சரியாகச் செய்துள்ளார். அறிவியல் அதிலும் இயற்பியல்… சிக்கலானது. தத்துவம், அதனினும் சிக்கலானது. தத்துவ விசாரணைகளும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் முரண்பட்டும் வளர்ந்ததை […]

Read more