சிவனின் உடுக்கை

சிவனின் உடுக்கை, சந்திரசேகர கம்பாரா, தமிழில் இறையடியான், காவ்யா, பக். 324, விலை 300ரூ. கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா எழுதிய கிராம மாறுதல்களைப் பதிவு செய்யும் நாவல் இது. கிராமத்தில் இயல்பை புராணம் சார்ந்த நாட்டுப்புறக் கதையின் அழகியலோடு சொல்லியிருக்கிறார். பண்ணையார்களின் பகட்டு ஆரவாரத்தால் பண்ணையில் வேலை செய்பவர்கள் சிந்தும் கண்ணீர் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் எப்படி தண்ணீராக ஓடுகிறது என்பதை ‘சிவனின் உடுக்கை’ வழி பதிவாகிறது. நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more