ஆ. மாதவன் இலக்கியத் தடம்

ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ. படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து. […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more