ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]

Read more

பிரம்ம ஞானம்

பிரம்ம ஞானம், உ. நீலன், அருள் பதிப்பகம்,விலை 125ரூ. தத்துவஞானத்தை புரிந்து கொள்பவர்களின் நலன் கருதி எழுதப்பட்ட இந்தியத் தத்துவங்களை விளக்கும் நூல். இதில் பிரம்மஞானம் குறித்து தெளிவாக நூலாசிரியர் விளக்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- கண்ணுக்காக நான், டாக்டர் பாபு ராஜேந்திரன்,நோஷன் பிரஸ், விலை 250ரூ. பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு ராஜேந்திரன் ‘கண்ணுக்காக நான்’ என்ற ஒரு ஆங்கில நூலில் தன் சுயசரிதையை எழுதுவதுபோல, ஒரு கண் டாக்டர் எப்படி உருவாகிறார் என்பதையும், அவர் […]

Read more

வேத கணிதம்

வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ. வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா, ஆலிஸ் கெ.ஜோஸ், நோஷன் பிரஸ், சென்னை, பக். 398, விலை 350ரூ. பெண்களுக்கு உகந்தது ஆசிரியர் அல்லது மருத்துவர் பணி என்பார்கள். இவ்விரு பணிகளும் அறம் சார்ந்தவை என்பதுதான் அதற்கு காரணம். நூலாசிரியரான ஆலிஸ் கெ. ஜோஸ், 40 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர். அவரே தனது சுய சரிதையை எழுதியுள்ளார். புகழ்பெற்ற தலைவர்கள், சான்றோர்கள் அல்லது சாதனையாளர்களின் சுயசரிதையின் நோக்கம் தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதில் இருக்கும் என்பதுதான். ஆனால் […]

Read more