குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார், பக். 352, விலை 275ரூ. குந்தியின் தந்தை பெயர் சூரசேனன், சகோதரன் வசுதேவன். கிருஷ்ணனும், பலராமனும் அண்ணன் மகன்கள். குந்தியின் தந்தை சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவனிடம் வளர்ப்பு மகளாக வளர்ந்ததால், இவள் குந்தி எனப் பெயர் பெற்றாள். பிறந்தது ஓர் இடம்; வளர்ந்தது வேறிடம். இல்லற வாழ்க்கையில் ஈடுபட இயலாத பாண்டுவை கணவனாகக் கொண்டாள். அரண்மனை வாழ்க்கையாவது கிடைக்குமா என்றால், அதுவும் கிடைக்கவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வனத்திற்குப் போய் விட்டான் பாண்டு. மந்திரத்தின் உதவியால் […]

Read more

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்

கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, பூம்புகார். ஒரு சமுதாயத்தின் உண்மையான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை, தெளிவாக எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடிய நாட்டுப்புறப்பாடல்கள் அமைந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி, காதல், தொழில், நையாண்டி, வழிபாடு என பால கோணங்களை எளிதில் உணர்த்தும் தாய்மை குணம் கொண்டது நாட்டுப்புறப் பாடல். இன்னும் கொஞ்சம் உயர்த்திச் சொன்னால், பழங்கால இலக்கியத்திற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் தாயாக அமைந்துள்ளன. நாட்டுப்புற பாடல்களின் மகுடம், அதன் எளிமையும், இனிமையும்தான். மனம் லயிக்கும் பல நாட்டுப்புறப் பாடல்கள் கொண்ட இந்த 648 பக்க […]

Read more