தமிழரின் தாவர வழக்காறுகள்
தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, விலை 210ரூ. தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 […]
Read more