மக்கள் சமூகத்தின் மனசாட்சி
மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 200, விலை 150ரூ. வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது. தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் […]
Read more