ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு

ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, புலவர் கா. கோவிந்தன், ராமையா பதிப்பகம், விலை 90ரூ. நாகரிகத்தில் சிறந்தவர்கள் தமிழ் மக்கள். ஆரியர் வருகைக்கு முன்பு அவர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு செய்வதே இந்த நூலின் நோக்கம். தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், சமுதாய அமைப்பு முறை, திருமண முறை, வணிகம் என பல்வேறு வாழ்க்கை முறைகளை சங்க இலக்கிய சான்றுகளுடன் புலவர் கா.கோவிந்தன் தொகுத்தளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர்

சீர்திருத்தச் செம்மல் இராமானுஜர், கவிஞர் இளங்கண்ணன், ராமையா பதிப்பகம், பக். 320, விலை 160ரூ. ‘அந்தணரானாலும் அன்பால் அனைவரையும்/சாந்தமாய்க் கொண்டநல் ஆத்திர தாரியம்/சீரார் இராமானுசர்த் தொண்டைச் சிந்தை கொள்/ஓராயிரத் தாண்டாம் வாழ்த்து’ என்னும் வாழ்த்துடன் துவங்கும் நூலாசிரியர், 36 தலைப்புகளில், ராமானுஜரின் வரலாற்றை சிறுசிறு தலைப்புகளில், தக்க திருக்குறள் மேற்கோள்களுடன், வைணவச் சுவை குன்றாமல் திறம்படத் தந்துள்ளார். ‘அங்கத்தில் பஞ்ச சம்ஸ்காரம் தரித்தவரே அய்யங்கார். அது சாதியன்று (பக். 75). ஒருவன் தன் சமயத்தில் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தூற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல் (பக். […]

Read more