மாயவனம்

மாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலைரூ.120 மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று வரை […]

Read more

சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more

பாரிஜாத்

பாரிஜாத், நாசிரா ஷர்மா, சாகித்ய அகடமி, விலைரூ.1150. சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத் அலகாபாதில் உள்ள பங்களாவை விற்றதிலிருந்து துவங்கி, அதை குடும்ப உறுப்பினர்கள் மீட்டெடுப்பது வரை பல நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் சொல்லப் பட்டிருக்கின்றன. ‘வாழ்வும் மரணமும் மேலே இருக்கும் இறைவனின் கைகளில் அல்லவோ இருக்கிறது’ என்று நினைப்பவளின் வாழ்க்கைப் போராட்டம் கதைப்பின்னலுக்குத் துணை செய்கிறது. முக்கிய பாத்திரங்களான நிகில், மைக்கேல், காசிம், பிர்தெளஸ் ஜஹான், எலேசன், ஷோபா […]

Read more

மதாம்

மதாம், டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.400. மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளேயின் மனைவி ழான் என்பவரைக் குறிக்கிறது. அவரது வரலாற்றையும், டியூப்ளேயின் வரலாற்றையும் புதுச்சேரியின் பேச்சு வழக்குடன் எடுத்துஉரைக்கிறது. பிரெஞ்சு சொற்கள் தமிழ் மயமாக்கப்பட்டு நாவலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை விளக்குவதற்காக நட்சத்திரக் குறியிட்டு பொருள் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னராக டியூப்ளே, 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அந்த வரலாறு தான் நாவலாகியிருக்கிறது. கவர்னராக இருந்த அவரை குற்றவாளி […]

Read more

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள்

ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள், எஸ்.ஏ.பெருமாள், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.160. ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள், அதன் நோக்கங்கள் என 15 தலைப்புகளில் பதிவு செய்து உள்ள நுால். சான்றாக, மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில், ‘தொழிலாளர்களிடம் ஒரு மகாசக்தி மறைந்து கிடக்கிறது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்களது மதிப்பையும் சக்தியையும் அவர்களை உணரச்செய்ய வேண்டியதே முக்கியம். அதை உணர்ந்துவிட்டால் அவர்கள் உடனே சுதந்திரமாக வளர்ச்சி பெறத் துவங்குவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஏழைத் தாயைக் கதாநாயகியாக்கி எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் […]

Read more

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது, வெ.நல்லதம்பி, வள்ளுவன் வெளியீட்டகம், விலை-ரூ.300. மலர்களின் ஆவணம் நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியவரும் தூர்தர்ஷனில் ‘எதிரொலி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்தவருமான மூத்த ஊடகவியலாளர் வெ.நல்லதம்பி எழுதியிருக்கும் முதல் நாவல் இது. மலர்களை விளைவிக்கும் வேளாண்குடியில் பிறந்த கமலா, நாவலின் முதன்மைக் கதாபாத்திரம். அவள் வாழ்க்கையில் முன்னேற அவளுடைய தமிழாசிரியரும் வேளாண் கல்லூரிப் பேராசிரியரும் வழிகாட்டுகிறார்கள். கமலாவுக்கும் மேலைநாட்டைச் சேர்ந்த ஆங்கிலக் கலப்புத் தமிழனான ஜார்ஜுக்கும் காதல் மலர்கிறது. கமலாவின் இத்தகைய வாழ்க்கைப் பயணத்தை முன்வைத்து மலர் விளைவித்தலில் ஈடுபடும் வேளாண்குடி […]

Read more

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி, நக்கீரன், காடோடி வெளியீடு, விலை: ரூ. 70, சிதைக்கப்பட்ட வாழ்க்கை எங்குமே பெண்களின் மீதான மதிப்பு என்பது அவர்களது உடலை மையமிட்டதாகவே அமைகிறது. அந்த மதிப்பீடு ஆண்களின் உடலுக்குப் பொருந்துவதில்லை. அத்தகைய சீரழிக்கப்பட்ட பெண் உடலின் அவலங்களைப் பேசுகிறது இந்தக் குறுநாவல். இதயம்கூட வெறும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை இது. சிதைக்கப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டது. உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட, குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நாவல் புரட்டிக்காட்டுகிறது. […]

Read more

சுந்தரவல்லி சொல்லாத கதை

சுந்தரவல்லி சொல்லாத கதை, உத்தமசோழன், கிழக்கு வாசல் வெளியீடு, விலை: ரூ.950. வேளாண் பெருமகளின் வெற்றிக் கதை வட்டார இலக்கியங்கள் பெரும்பாலும் நம் வாழ்வை நகல் எடுப்பவையாகவே இருக்கின்றன. ஆர்.சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’, ‘கரிப்பு மணிகள்’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ போன்ற வட்டார இலக்கியங்கள் முக்கியமானவை. பாமா, இமையம், பெருமாள் முருகன், ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் வேளாண், மீனவ, பழங்குடியினச் சமூகங்களை மையமாகக் கொண்டு எழுதிவருகிறார்கள். அந்த வகையில் உத்தமசோழனின் ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’, கீழத்தஞ்சையை மையமாகக் […]

Read more

நெஞ்சினில் ரஞ்சனி

நெஞ்சினில் ரஞ்சனி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.210. ‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தர மாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள். மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் […]

Read more

புனிதம் தேடும் புதினம்

புனிதம் தேடும் புதினம், கவுதமன் நீல்ராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.70. திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத் தொலைத்த சோகம், வருத்தம், தனிமை, வேலைக்குச் செல்லும் இயல்பு, இயலாமை என அனைத்துப் பக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். செங்கோடனாகப் பிறந்து சிறுநகையாகமாறிய திருநங்கையைக் கடைசியில் அவரது பெற்றோர் ஏற்கச் செய்வது நம்மை நெகிழச் செய்கிறது. இனிய துாய தமிழ் நடையைக் கையாண்டும் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது. திருநங்கையருக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு என மெல்லிய நுாலிழையில் கோர்த்து […]

Read more
1 2 3 5