அம்மா
அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ.
சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014.
—-
எனது குழந்தை பயங்கரவாதி, தீபச்செல்வன், விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 80, விலை 50ரூ.
தாங்கள் வாழ வேண்டிய தங்களின் தேசம் விடுதலை பெற வேண்டும் என்கிற ஈழ தேசக்குழந்தைகளின் குரலே இக்கவிதைத் தொகுப்பு. பெரும்பாலும் நிலம் பற்றியதாகவும், குழந்தைகளைப் பற்றியதாகவுமே கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஈழப் போராட்டத்தில் குழந்தைகள் குருதி சிந்திய கொடுமைகளையும், இழந்த வாழ்வை மீட்கும் துயரத்தை காலம் அவர்களின் மீது சுமத்தியிருப்பதையும் உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் இவை. கொல்லப்படமுடியாத/நாட்டின் செடிகளாகப் பிறந்திருக்கும் இக்குழந்தைகள்/சுதந்திரத்தைப் பெறுவார்கள் நாளை என்ற நம்பிக்கை தீபச்செல்வனிடம் உண்டு. நன்றி: குமுதம், 6/8/2014.