சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…,
சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம்,மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ.
சாதி, தீண்டாமை என்ற கோட்பாடுகள் தமிழகத்தில் ஏன் தோன்றின, எப்போது தோன்றின? குறிப்பாக சங்க இலக்கியங்களில் அவை தென்படுகின்றனவா? என்ற தேடலின் முயற்சியே இந்நூல். சாதி, தீண்டாமை என்கிற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்ற வகையிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 3/8/2015.
—-
வல்லினம் நீ உச்சரித்தால், முகமது மதார், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 50ரூ.
ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் மயில் இறகு உணர்வு போன்று காதல் தொட்டுக்கொண்டு செல்லும். அந்த காதலை வார்த்தைகளின் வெளிப்பாட்டின் மூலம் கவிதைகளாக நம் இதயத்தை தொட்டு இருக்கிறார் நூலின் ஆசிரியர் முகமது மதார். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.