தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும்
தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 500ரூ.
திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் அனைத்துல 11வது ஆய்வு மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பல்துறை பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் வாசித்து அளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். திருக்கோவில்களில் வளர்ந்த தெய்வத்தமிழ், தெய்வத்தமிழ் இலக்கியங்கள், திருக்கோவில்கள் வளர்த்த மரபுக் கலைகள், திருக்கோவில்களின் கலையும் மாட்சியும் ஆகிய தலைப்புகளின் கீழ் 91 கட்டுரைகள் கருத்துக் கருவூலமாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.
—-
உலகின் தலைசிறந்த பழமொழிகளும் பொன்மொழிகளும்,வழக்கறிஞர் சோ. சேசாச்சலம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 70ரூ.
ஏறத்தாழ 1000 பழமொழிகளும், புத்தர், காந்தி, விவேகானந்தர் ஆகியோருடைய பொன்மொழிகளும் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.
—-
விஷக்கடிகளுக்கு மூலிகை மருந்துகள், டாக்டர் சி.ஏ. ரவி, தி சுசான்லி பப்ளிகேஷன்ஸ், கடலூர், விலை 95ரூ.
பாம்பு, தேள், பூரான், நாய், பச்சோந்தி முதலியவை கடித்துவிட்டால் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்த நூல் விவரிக்கிறது. குறிப்பாக, பாம்பு கடித்தவர்களின் உயிரைக் காப்பாற்ற பல்வேறு பயனுள்ள வழிகளைக் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.