வாழ்வியல் பூக்கள்
வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ.
அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுடன் தொடர்புடையமாக இருக்கிறது திருமதி சங்கரி அப்பனின் எழுத்துக்கள். -ஜனகன்.
—-
ஒருத்தி சொன்னாள், வசந்தகுமாரி செல்லையா, சூடாமணி பிரசுரம், செல்லையா அப்பார்ட்மென்ட்ஸ், 23/2, பழைய மாம்பலம் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 220, விலை 90ரூ.