சுதந்திரத்தின் நிறம்

சுதந்திரத்தின் நிறம், லாரா கோப்பா, தமிழில்: பி.ஆர்.மகாதேவன் தன்னறம் நூல்வெளி வேங்கிக்கால், விலை: ரூ.500 ஒரு கிராமத்தில் நிலச்சுவான்தார்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மக்களோடு போய் உரையாடுவதுதான் அவர்கள் அணுகுமுறையின் முதல் படி. நிலச்சுவான்தாரை மட்டுமே நம்பி வாழும் சூழலில் மக்களால் எப்படி அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க முடியும்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அதைச் சாத்தியப்படுத்தினார்கள். மக்களோடு தங்கியிருந்து, அவர்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு, அவர்களுள் ஒருவராகத் தங்களை உணர வைத்து நம்பிக்கையைப் பெறுவார்கள். பிறகு, மக்களையும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். ஒருகட்டத்தில், இரு […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more

பஞ்சதசி – மூலமும் உரையும்

பஞ்சதசி – மூலமும் உரையும்; கோவிலூர் மடாலயம், பக்.280; ரூ.300. உபநிடதங்களின் கருத்துகளை எளிமையாக்கி வேதாந்த பிரகடனம் என்கிற பெயரில் தொகுப்பு நூல் ஒன்று வடமொழியில் எழுதப்பட்டது. அதில் பதினைந்து பிரிவுகளில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சுலோகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளவை பஞ்சதசி (பதினைந்து) ஆகும். இதனை இயற்றியவர் சிருங்கேரி மடத்தின் பன்னிரண்டாவது குருவாக விளங்கியஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் ஆவார். இந்நூலில் இடம் பெற்றுள்ள பதினைந்து அத்தியாயங்களில் அனைத்துவிதமான வேதாந்த கருத்துகளும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150 நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ்கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.270 எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது. ‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு […]

Read more

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.50. வரலாற்றாசிரியரின் வரலாறு மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் வழியாக ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பையும் பற்றித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மருதன் எழுதியுள்ள நூல்தான் ‘ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்’. ரொமிலா தாப்பர் சிறு வயதில் காந்தியைச் சந்தித்தது, நேருவைச் சந்தித்தது போன்றவை குறித்தெல்லாம் மருதன் சுவைபட எழுதியிருக்கிறார். சம காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட ஒரு வரலாற்று […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.300 வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மா மனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில் மேம்பாடு, மொழிப் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, உலகமயமாதல், இட ஒதுக்கீடு, கல்வி மறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப் பிரச்னைகள், சமூக சேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில் நுட்பத்தாலும் காந்தியக் கொள்கை வழி நின்று தீர்வுகளைச் சொன்னவர் அருட்செல்வர். ஒரு […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக். 240,விலை 150ரூ. இந்த நூலில் 30 அணிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. ‘மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் […]

Read more

கர்ணன்: காலத்தை வென்றவன்

கர்ணன்: காலத்தை வென்றவன், சிவாஜி சாவந்த், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் வெளியீடு, விலை: ரூ.899. இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’. இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் […]

Read more

இராஜாஜி

இராஜாஜி, ம.பொ. சிவஞானம், ஏ.கே.எல்., பதிப்பகம், விலைரூ.165 மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார். ராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் […]

Read more
1 111 112 113 114 115 505