பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் பூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், விலை 350ரூ. மலையாள இளையோர் இலக்கியத்தில் புகழ்பெற்றவர் சுமங்களா. ‘ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம்தான்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவர் எழுதியுள்ள கதைகள் சுவாரசியமானவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பேரன்பின் பூக்கள் முக்கிய வரவு. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028027.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0

மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 50ரூ. சோதனைக்கூடமோ, பெரிய கருவிகளோ இன்றி, வீட்டில் இருக்கும் மலிவான பொருட்களை வைத்து அறிவியல் பரிசோதனைகளைச் செய்ய உதவுகிறது இந்நூல். 42 சோதனைகளை எளிய பொருட்களின் உதவியோடு மாணவர்கள் செய்து பார்க்கலாம். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நியூட்ரினோ

நியூட்ரினோ, வே. மீனாட்சி சுந்தரம், புதிய அரசியல் நெறி பதிப்பகம், விலை 50ரூ. நியூட்ரினோ திட்டம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற தவறான நம்பிக்கை விதைக்கப்படுகிறது. தேவையற்ற பயத்தை அகற்றும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இது வெறும் நியூட்ரினோ ஆதரவு புத்தகமாக எழுதப்படவில்லை. எதிராளிகள் முன்வைக்கும் வாதங்கள் என்ன என்பதைக் கூறி, அதற்கு அறிவியல் ரீதியாகப் பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோர் புத்தக அலமாரியை அலங்கரிக்க வேண்டிய முக்கிய நூல் இது. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

அகலாது அணுகாது

அகலாது அணுகாது, ஆ.மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக்.156, விலை 100ரூ. காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்… மதுரை காவல் உதவி ஆணையாளரும், எழுத்தாளருமான முனைவர் மணிவண்ணனின் கைவண்ணத்தில் உருவான முத்தான கவிதைகளின் தொகுப்பு இது. வாழ்வியல், அறம், மனம், இறைவன், பொருள், காதல், தன்னம்பிக்கை என, பல பக்கங்களை ஒரே நுாலில் தொட்டிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராய மண்டபத்தில் திடீர் தீ விபத்தில் உயிர்துறந்த புறாக்களுக்கு இந்நுால் சமர்ப்பணம்’ என்ற வித்தியாசமான சிந்தனையுடன் ஆரம்பிக்கும் நுாலின் முதல் […]

Read more

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, பேராசிரியர் அ.கா.பெருமாள், காவ்யா, பக். 140, விலை 150ரூ, ஆராய்ச்சி, பதிப்பு எனும் இரு துறைகளிலும் தன் வாழ்வை முழுவதும் செலவிட்ட எஸ்.வையாபுரி, 21 நுால்களை வெளியிட்டுள்ளார்; 45 நுால்களை பதிப்பித்துள்ளார். வையாபுரிப் பிள்ளையைப் பற்றி எழுதியோர் எல்லாருமே, அவருக்குத் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பை, எழுதாமல் விட்டதில்லை என்று கூறும் ஆசிரியர், ‘எஸ்.வி., வடமொழி உட்பட, பல மொழிகள் அறிந்தவர். ‘தமிழ் ஆய்வுக்குத் தேவையான மேலான பின்னணி உடையவர். தமிழ் மொழியின் மேல் அவர் கொண்டிருந்த மதிப்பும், நேசமும் அவரது […]

Read more

ஏர்வாடியம்

ஏர்வாடியம், பேராசிரியர்கள் இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 176, விலை 125ரூ. பிரபல எழுத்தாளரும், கவிதை உறவு ஆசிரியருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய பார்வையை தரும் எளிமையான நுால் இது. அவரோடு நெருங்கி பழகிய இலக்கிய இணையர்கள், இரா.மோகனும், நிர்மலா மோகனும், ‘ஏர்வாடியம்’ படைத்திருப்பது இன்னும் தனிச்சிறப்பு. இதுவரை, 104 புத்தகங்கள் எழுதியுள்ள, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை ஏர்வாடியார். நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என, பல பரிமாணங்களில் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் கோலோச்சுகின்றன. அதை தனித்தனி அத்தியாயங்களாக பிரித்து படிக்க […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், முனைவர் இரெ.குமரன், காவ்யா, பக். 316, விலை 300ரூ. பொதுவாக புலவர்கள் எல்லை கடந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். ஒளி புகா இடத்திலும் கவி புகுவான் என்று சொல்லக் கேட்டதுண்டு. அசாத்திய கற்பனைத் திறன் காணாத உலகுக்கெல்லாம் உள்ளத்தை வழிநடத்தி உலா செல்வதோடு, ஊகங்களின் வழியே புதுமைகளை நிர்மாணிக்கிறது. இவ்வுலகின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கற்பனைகளாலும் கைதேர்ந்த ஊகங்களாலும் அடையப்பட்டவையே. ஆனால், அவை அடையப்பெறும் முன், அதற்கான வித்தை யாரோ இட்டுவிட்டுச் செல்கின்றனர். அவை இயற்கையின் அங்கமாகவும் இருக்கலாம். நம்புதற்கரிய […]

Read more

சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், பக். 446, விலை 420ரூ. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ, நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான அணுகுமுறைகளை குறைக்க வேண்டும். மனித குலம் மாற வேண்டும். ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், மனித சமுதாய நலனுக்கும் மிகையான உயிரினப் பன்மயம் கொண்ட ஒரு சூழ்நிலை அவசியமாகிறது. மனிதர்களின் செயலால் ஏற்படும் உயிரினப் பன்மயத்தின் இழப்பானது, ஆபத்தானப் பொருளாதார மற்றும் சமுதாய சீர்கேட்டுக்கு அழைத்துச் சென்றுவிடும் என்பதை, பல்வேறு தரவுகள் மூலம் எச்சரிக்கிறார் நுாலாசிரியர். […]

Read more
1 227 228 229 230 231 505