சுட்டிக் கதைகள்

சுட்டிக் கதைகள், நீலாவதி, சுருதிலயம், விலை: ரூ.125. அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

அழகு மல்லிகை

அழகு மல்லிகை, கவிஞர் வி.ஏ.நாராயணன், நாராயணன் பதிப்பகம், விலை:ரூ.50. இந்த நூலின் ஆசிரியர் சிறுவயதில் தான் கேட்ட செய்திகள், பார்த்த காட்சிகள், பட்ட அனுபவங்கள் அடிப்படையில், குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு ஏற்ற 31 பாடல்களைக் கொடுத்து இருக்கிறார். நீதியைச் சொல்லும் வகையிலும் இவை அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தேன்கூடு

தேன்கூடு, தொகுப்பு ஆசிரியர்: உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலை:ரூ.110. சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகை மிகச் சிறப்பான 100 பாடல்கள் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் தொடர்பான பல நூல்களை எழுதியவரான இந்த நூலின் தொகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், பழைய கதை புதிய பாடல் உள்ளிட்ட நூல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 100 பாடல்களும் அறிவுக்கு விருந்தாவதோடு, சிறுவர்-சிறுமிகளை வெகுவாகக் கவரும் வண்ணம் உள்ளன. நன்றி: […]

Read more

நூறு புராணங்களின் வாசல்

நூறு புராணங்களின் வாசல், முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் […]

Read more

சித்ரவதை முகாம்

சித்ரவதை முகாம், ரவி பார்கவன், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.140. குழந்தைகளுக்கு புத்தி கூற வேண்டியதில்லை; அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எரிச்சல் அடையாமல் பதில் கூறினாலே போதும் என்பதை உணர்த்தும் நுால். குழந்தைகளுக்கு…* இரண்டு வயதில், கல்வி சுமை ஏற்றுவது சரியா* பக்கத்து வீடு, உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, கணவனும் மனைவியும் பணிக்கு செல்வது நியாயமா.இதுபோன்ற கேள்விகளை எழுப்புகிறது. குழந்தையை சரியாக வளர்க்கிறேனா என நெருடல் ஏற்படுத்தும் உரையாடல்கள் ஏராளம். இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, வரம்பு மீறிய செல்லம், நடத்தை மீறும் பெற்றோர் என […]

Read more

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75

உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக்கதைகள் -75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலை 230ரூ. பாட்டி தனது பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாணியில், தமிழகத்தின் பாரம்பரியமான 75 குட்டிக் கதைகள் ஒவ்வொன்றும் முழுப்பக்கப் படங்களுடன் தரப்பட்டு இருககின்றன. வளரும் தலைமுறை குழந்தைகள் படித்துப் பயன்பெறவேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இளையோரே, இனியவை கேளீர்!

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்), பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.360. பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நுாலின் ஆசிரியர். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more

சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம், முனைவர் செளந்தர மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார். உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் […]

Read more
1 2 3 4