உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75

உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கு சுவையான குட்டிக் கதைகள் – 75, கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.230 குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை குதுாகலமூட்ட, சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாட்டி வடை சுட்ட கதையில் துவங்கி, அரசரும் பன்றியும் என்ற குறுங்கதையுடன் முடிகிறது. ஏற்கனவே கேட்ட கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் பேராய விருது பெற்று நுாலாக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 25/10/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006539_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

புதிய ஆத்திசூடி கதைகள் 50

புதிய ஆத்திசூடி கதைகள் 50, வை.சங்கரலிங்கனார், நண்பர்கள் பதிப்பகம், விலைரூ.150 மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன. புதிய ஆத்தி சூடி கவிதை வரிகளே தலைப்பாக்கப் பட்டுள்ளன.கதைகளின் வரும் கருத்துப்படி வாழ்ந்தால், மனித குலம் மகான் குலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படித்தால் தன்னம்பிக்கை ஏற்படும். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாஸ்ராவின் நூலகர்

பாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பதிப்பாசிரியர் அனந்த் பய், விளக்கம் திலிப் கதம், வெளியீடு அமர் சித்ர கதா, மூன்று தொகுதிகளும் சேர்த்து 2199ரூ. அமர் சித்ர கதை என்ற தலைப்பில் வெளியாகும் அனைத்து சித்திரக் கதைகளும், சிறுவர்களையும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்பது, மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாபாரதப் புத்தகத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. வியாசர் அருளிய மகாபாரதக் கதை எவ்வாறு, எந்த சமயத்தில் சொல்லப்பட்டது என்பது முதல் தொடங்கி இந்த இதிகாசத்தின் இறுதிப் பாகம் வரை உள்ள அனைத்து முக்கிய சம்பவங்களும் அழகாகத் […]

Read more

பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் பூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், விலை 350ரூ. மலையாள இளையோர் இலக்கியத்தில் புகழ்பெற்றவர் சுமங்களா. ‘ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம்தான்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவர் எழுதியுள்ள கதைகள் சுவாரசியமானவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பேரன்பின் பூக்கள் முக்கிய வரவு. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028027.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி வெளியீடு, விலை 80ரூ. பெற்றோர், ஆசிரியருக்கு! குழந்தைகளைத் தவறிழைக்க அனுமதிக்க வேண்டும், அவர்கள் தலையில் அறிவைத் திணிக்கக் கூடாது, அவர்கள்மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஆசிரியரும் பெற்றோரும் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளைச் செயல்படுத்த நடைமுறை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குகிறது, ‘குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்’ புத்தகம். பள்ளித் தலைமையாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள க.சரவணன் எழுதியிருக்கும் இப்புத்தகம் குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களும் சிறந்த கையேடு. நன்றி: தி […]

Read more

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்,முல்லை பதிப்பகம்,  பக்.112, விலை ரூ.90. குழந்தைகளுக்கான வித்தியாசமான கற்பித்தல் முறையை உலகுக்கு அளித்த மரியா மாண்டிசோரி, இந்நூலில் குழந்தைகளைக் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். குழந்தை தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. இதுவே ஆதாரமாக இருக்கும் தத்துவம். குழந்தை தன்னுடைய எண்ணங்களை வெளியிட விரும்பும்போது பிரத்யேகமான முறையில் செய்கிறான். அது அவனுடையதேயான முறை. குழந்தைகளை தம்முடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் […]

Read more

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ. அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் […]

Read more

மௌனமாயொரு இடிமுழக்கம்

மௌனமாயொரு இடிமுழக்கம், ட்யுராங்கோ அதிரடி, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. சம்மரைக் கொண்டாட சாகசங்கள் நிறைந்த விறுவிறு காமிக்ஸ்! புரட்சிப்படை, கூலிப்படை, அதிகார வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைகள், சதிகள், கொடுமைகள் என்று வன்மேற்கின் ரத்தவெறி யுத்தங்களைப் படம்படமாக நகர்த்தி பிரமிக்கச் செய்யும் த்ரில்லர். பள்ஸ் காதல், பாசம், வீரம் நிறைந்த ட்ராஜெடி என்று, கோடை மலராக இரட்டை காமிக்ஸ்! கதாநாயகன் ட்யுராங்கோவின் மின்னல் வேகமும், இடிமுழக்கமாக எதிரொலிக்கும் தோட்டாக்களின் சத்தமும் கோடை மழையாகவே காமிக்ஸ் பிரியர்களைக் கொண்டாடச் செய்யும் […]

Read more
1 2 3 4