மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி! சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்! இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா,  இரும்புப் பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.288. எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை […]

Read more

சேப்பியன்ஸ்

சேப்பியன்ஸ், யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சு சண்முகம், மஞ்சுள் ப்பளிஷிங் அவுஸ், பக். 499, விலை 499ரூ. பிரபஞ்சத்தோற்றம், பூமி உருவாதல், உயிரினங்களின் தோற்றம் என 1,350 கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை விளக்கி வியக்க வைக்கிறது இந்த நூல். கோடானு கோடி உயிர் இனங்களில் ஒன்றாகவும், அரை குறை ஆடையுடனும், பரட்டைத் தலையுடனும், காய் கனிகளைப் பொறுக்கிக்கொண்டும், எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடி, திரிந்து கொண்டிருந்த மனித இனம், படிப்படியாக மாறி, இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற ஓர் இனமாக மாறி […]

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம், வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. இந்த நூல் மூலம் மகாகவி பாரதியாரை வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடிகிறது. பாரதியாருக்கும், வள்ளலாருக்கும் உள்ள ஒற்றுமை, பாரதியாருடன் நேரில் பழகிய ராஜாஜி உள்பட 5 பிரமுகர்களின் ஆச்சரியமான கருத்துக்கள், பாரதியாரின் நகைச்சுவை, பேரறிஞர் அண்ணாவின் பாராட்டு என்று பலதரப்பட்ட ருசிகரமான தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 30/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027275.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

நாங்கள் நடந்து அறிந்த காடு

நாங்கள் நடந்து அறிந்த காடு ,lதமிழில் வ.கீதா , தாரா வெளியீடு , மரபு அறிவு பெரும்பாலான நவீனத்துவவாதிகளால் துச்சமாகக் கருதப்படுகிறது. ஆனால், மரபு அறிவு எனும் பொக்கிஷம் எப்படிப்பட்டது. அது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆனைமலைக் காட்டுப் பகுதிகளில் வாழும் காடர் பழங்குடியினரின் சிலரது வார்த்தைகள் வழியாகக் கதைபோலக் கோத்துத் தந்துள்ளனர் மாதுரி ரமேஷும் மனிஷ் சாண்டியும். இதை எழுத்தாளர் வ.கீதா சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ. எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய […]

Read more

பாரதி முதல் கவிதாசன் வரை

பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது. பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால். பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய […]

Read more

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more

காமராஜர் ஓர் மகாத்மா

காமராஜர் ஓர் மகாத்மா, டாக்டர் தேனி அ. ஈஸ்வரதாஸ், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 75ரூ. “படிக்காத மேதை” என்றும், “தமிழகக் குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர்” என்றும் போற்றப்படுபவர் காமராஜர். அவர் முதல் – அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் நடத்தி சாதனை புரிந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் டாக்டர் தேனி அ.ஈஸ்வரதாஸ். காமராஜர் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள்

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள், மவ்லவி பி.எம்.கலீலூர் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 100ரூ. சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் பல எழுதி பிரசித்திப் பெற்றவர். இவர் முன்னாள் ஜனாதிபதியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகளைச் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். அப்துல் கலாம் இஸ்லாமியராக இருந்தும், அந்த முறையில் அவர் வாழவில்லை என்ற கோணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில எழுப்பிய விமர்சனங்கள், எவ்வளவு தவறானவை என்பதை தக்க ஆதாரங்களோடு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் […]

Read more
1 2 3 4