உனக்கும் ஓர் இடம் உண்டு

உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம்,  பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

நான் கண்ட அந்தமான்

நான் கண்ட அந்தமான், நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பயணங்கள் மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒரேபாதையில் பலர் பயணித்தாலும் ஆளுக்கு ஆள் அனுபவம் வேறுபடும். அந்தவகையில் அந்தமான் தீவுக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவத்தை, வித்தியாசமான நடையில் பயணக்கட்டுரையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

டோக்கன் நம்பர் 18

டோக்கன் நம்பர் 18, திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பத்துப்பேர் எழுதிய இருபது கதைகளின் தொகுப்பு. மண்வாசம் வீசுவது, மனதை அழுத்துவது, காதலைச் சொல்வது என்று ஒவ்வொரு கதையும் தனித்தனி பாதையில் பயணிக்கச் செய்கிறது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த பத்து எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து நூலாக்கி இருப்பது வித்தியாசமான முயற்சி. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், பக். 144, விலை 90ரூ. எதையாவது உபதேசிப்பதற்காகவோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. உங்களை நீங்களே உணர்ந்துகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது. மனிதர்களின் துடிப்புகள் சயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி, நிதானமற்ற மானுட சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கூறுகிறது. நன்றி: […]

Read more

உன்னைவிட்டு விலகுவதில்லை

உன்னைவிட்டு விலகுவதில்லை, எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திருநங்கைகள், திருநம்பிகளின் விமர்சனங்களை கேள்விகளாக்கி நாவலில் விடை தேடும் முயற்சி இது. மூன்றாம் பாலினத்தின் மூடப்பட்ட ரகசியங்களை நாவலில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மூன்றாம் பாலினத்தின் மீது சமுதாயம் திணிக்கும் அழுத்தம், அவர்களின் வாழ்வைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இன்றி அவர்களை ஏளனமாக கடந்து போவதைச் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

இட்டாரிச் சீமை

இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. சொற்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து, இங்கேதான் உட்கார வேணடும் என்ற அதிகார மொழி இக்கவிதைகள்ல இல்லை. எல்லாம் இயல்பாய், வட்டார மொழியின் அசைக்க முடியாத மண்வாசனையாய் கவிதைகள் தடம் பதித்துள்ளன. இட்டாரிச் சீமை வழி ஒரு கிராமத்தில் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களையும் மனங்களையும் நமக்குத் துணையாக அனுப்பியுள்ளார் கவிதை வரிகளால். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை விட்டு விலகுவதில்லை, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் எஸ். செல்வசுந்தரிக்கு இது முதல் நாவல். ஆயினும், வார்த்தைகளையும், சம்பவங்களையும் செதுக்கிச் செதுக்கி, இதை ஒரு நல்ல நாவலாக உருவாக்கியிருக்கிறார். கதையில் முக்கிய பாத்திரங்களாக வருகிறவர்கள் திருநங்கைகள். அவர்களுடைய வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்த நாவல். முதல் நாவலையே வெற்றி நாவலாக உருவாக்கியுள்ள செல்வசுந்தரி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

கை நழுவும் சொர்க்கம்

கை நழுவும் சொர்க்கம், எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம். தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை கவிதையாகவும், புதினமாகவும், சிறுகதையாகவும் வெளிப்படுகின்றன. ‘செல்வசுந்தரி’யும் அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். அதற்கு சாட்சி, அவரின் கைநழுவும் சொர்க்கம் சிறுகதைத் தொகுப்பு. புதினம் எழுதுவது எளிது; சிறுகதைகள் எழுதுவது தான், கடினம் என்றொரு கருத்து உண்டு. செல்வசுந்தரி, தன் சிறுகதை நூல் தொகுப்பின் வாயிலாக அந்த கடினமானப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ‘கை நழுவும் […]

Read more
1 2 3