சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள்

தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள், யதி, தமிழில்: யூமா வாசுகி, தன்னறம் வெளியீடு, மொத்த விலை: ரூ.620. 1998-ல் ‘காலச்சுவடு’ இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் எடுத்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1999) என்ற பெயரைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல், நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச்செய்தது. அதன் பிறகு, செப்டம்பர் 1999-ல் வெளியான ‘சொல் புதிது’ […]

Read more

சிகண்டி

சிகண்டி, ம.நவீன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை: ரூ.640 மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர் ம.நவீன். இவருடைய முதல் நாவலான ‘பேய்ச்சி’யைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே கோயில் பின்னணியில் நடைபெறும் கதை. தீபன் என்னும் சிறுவனின் பதின்ம வயதிலிருந்து 20 வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராத ஒரு நிகழ்வால் திடீரென ஆண்மைக் குறைவுக்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்கச் சகலவிதமான முயற்சியையும் எடுக்கிறான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையிலிருந்து பாலியல் உறவுகள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்துக்குப் போய்ச்சேர்ந்தது, அவனது […]

Read more

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும்

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. பெருந்தொற்றுக் காலத்தில் கரோனா வைரஸ், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின. தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடம் அவை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களின் மூலம் அறிவியலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. நன்றி: […]

Read more

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!, மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, விகடன் பிரசுரம், விலை 220ரூ. நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு நம் முன்னோர் மூலிகைகளையே நம்பி இருந்தனர். மூலிகைகள் நோயைக் குணமாக்கியதோடு, நோய் மீண்டும் தாக்காமலும் தடுத்தாட்கொண்டன! நீரிழிவை நீக்கும் விளா, வாத நோயைத் தீர்க்கும் நொச்சி, காமாலையை விரட்டும் கீழாநெல்லி என நம்மைச் சுற்றியுள்ள செடிகொடிகளின் மருத்துவ மகத்துவத்தை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385. இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும் காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய […]

Read more

ஆட்டிசம் ஒரு பார்வை

ஆட்டிசம் ஒரு பார்வை, டாக்டர் ராதா பாலசந்தர், சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அண்ட் கம்யுனிகேஷன்,  பக்,160, விலை 150ரூ. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குத் தான் அளித்த சிகிச்சை அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆட்டிசத்துக்குத் தனியொரு நிபுணரின் வழிகாட்டல் மட்டும் போதாது. மனநல ஆலோசகர், நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இசை, நடனம், யோகா போன்றவை ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கவனக்குவிப்பை அதிகரிக்கும் என்பன […]

Read more

மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும், தமிழாக்கம்: டாக்டர் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 95ரூ. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ (IJMR) எனும் மருத்துவ இதழ் காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘Gandhi and Health’ எனும் ஆங்கில நூலை வெளியிட்டது. அதன் தமிழாக்கம் இது. மருத்துவ அறிஞர்களும் காந்தியவாதிகளும் எழுதியிருக்கும் 20 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் காந்திக்கும் மருத்துவத் துறைக்கும் இடையிலான உறவையும், அவருடைய மருத்துவப் பங்களிப்பையும் விவரிக்கிறது. வணிக நோக்கில் […]

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75. புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

அறிவு

அறிவு, ஞானத்தின் ஆய்வியல் நாராயண குரு, ஆங்கில மொழியாக்கமும் உரையும்: நித்ய சைதன்ய யதி, தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன், தன்னறம் வெளியீடு, விலை: ரூ.80. நவீன இந்தியாவின் முக்கியமான சீர்திருத்தவாதியும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் […]

Read more
1 2 3 4 5 44