மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்

மாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள், கு.வை.பாலசுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. விலங்குகளை பார்ப்பதும், அவற்றை பற்றி கேட்பதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். வனவிலங்கு பூங்காவுக்கு செல்வதை அனைவரும் விரும்புவர். பல மிருகங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட நமக்கு எதுவும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், காண்டாமிருகம், யானை, நீர் யானை, ஒட்டகசிவிங்கி, கடமா என்னும் காட்டெருமை, கடுங்கால் ஒட்டகம் ஆகிய விலங்குகள் பற்றி விபரமாக, தெளிவாக, எளிய நடையில் ஆசிரியர்கள் […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், பக். 268, விலை 200ரூ. கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார். கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் […]

Read more

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 200, விலை 125ரூ. காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை […]

Read more

தொடர்கதைகளும் முற்றும்

தொடர்கதைகளும் முற்றும், வெ.ஆத்மநாதன், மணிமேகலை பிரசுரம், பக். 160, விலை 80ரூ. இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை. மாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது. – ச.சுப்பு […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம், முனைவர் மா.ராமச்சந்திரன், மணிமேகலை பிரசுரம், பக். 118, விலை 130ரூ. ‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள். ‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய […]

Read more

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள்

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள், ஸ்டீபன் மாத்தூர், மணிமேகலை பிரசுரம், விலை 200ரூ. சொல்லத் தயங்குகிற ஒரு சொல்லாக எய்ட்ஸ் நோய் ஆகிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் சொல்லாமல் வெட்கப்பட்டு வேதனைத் தீயில் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். ஆறுதல் கூற அவர்களுக்கு யாருளர் என்று சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது. அத்தகைய நோயாளிகள் வாழ்விலிருந்து விலகியே நிற்பது கண்டுணர்ந்து, அவர்களின் அவலத்தை வசன கவிதையாக வடித்துள்ளார் நுாலாசிரியர் ஸ்டீபன். நோய் வாய்ப்பட்டவரின் குடும்ப நிலையும், அந்நோய்க்கு ஆளாகி வருந்தும் வருத்தமும், கண் கெட்ட பிறகு […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் எள்ளளவும் […]

Read more

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, வண்ணைத் தெய்வம், மணிமேகலை பிரசுரம், பக். 272, விலை 170ரூ. இலங்கை மண்ணைவிட்டு பிரான்சிற்கு புலம் பெயர்ந்த எழுத்தாளரான வண்ணைத் தெய்வத்தின் பதிமூன்றாவது புத்தகம் இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர். மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது; கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது. நன்றி: தினமலர், […]

Read more

காலத்தை வென்ற காவிய மகளிர்

காலத்தை வென்ற காவிய மகளிர், கா.விசயரத்தினம், மணிமேகலை பிரசுரம், பக். 180,விலை 115ரூ. மகாபாரதத்தில் அம்பை, திரவுபதி, சுபத்திரை இப்படி, 16 மகளிரும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி, கவுந்தியடிகள், தேவந்தி ஆகிய ஐவர் பற்றியும், மணிமேகலையில் மாதவி, சுதமதி, ஆதிரை என வரும் மகளிர் பற்றியும், சீவக சிந்தாமணியில் வரும் குணமாலை, விமலை, பதுமை, சுரமஞ்சரி இப்படி எட்டு மகளிர் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி, கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களில் வரும் மகளிர் சிறப்புகளையும், அந்தந்த காவியக் கவிதைகளைச் சுருங்கக் கூறி விவரித்திருப்பது […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, மருத்துவர் சி.அசோக் , மணிமேகலை பிரசுரம், அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more
1 3 4 5 6 7 9