தீயில் எரிந்த உண்மைகள்

தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார். மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ. மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல். அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், பக்.140, விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், டாக்டர் ஜெ. பாஸ்கரன், மணிமேகலை பிரசுரம், பக். 144, விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 30/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு, மணிமேகலை பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் பிறப்பு, வளர்ப்பு, பள்ளி வாழ்க்கை, வறுமையால் படிப்பை கைவிட்டு நாடகத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டது. பின்னர் அவரின் திரையுலக பிரவேசம், திருமண வாழ்க்கை, அண்ணாவுடன் நட்பு, புதிய கட்சி தொடங்கியது, முதல் அமைச்சரானது, மறைவு உள்ளிட்டவை விரிவாக கூறப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் படிப்படியாகவும், சுவைபடவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறு வயதில் […]

Read more

வாழ்வியல் கதைகள் 100

வாழ்வியல் கதைகள் 100, கவிஞர் சி.ஸ்ரீரங்கம், மணிமேகலை பிரசுரம், பக்.142, விலை 90ரூ. இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ‘வீடு, பணிவு, வாடகை, ஆட்டோ, செல்லம், சாதுர்யம், புத்திசாலி, அப்படி இப்படி, போட்டோ, சிம்பிள், தீபாவளி, சொல்வதற்கு ஒன்றும் இல்லை’ உள்ளிட்ட கதைகள், இன்றைய சமுதாயத்திற்கு பாடம் கற்பிப்பதாக உள்ளன. நன்றி: தினமலர்,13/5/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026733.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம். நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது? என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை […]

Read more

பெண்களும் அவர்களின் குணங்களும்

பெண்களும் அவர்களின் குணங்களும், அமராவதிபுதூர் அ.மோகன், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 160ரூ. எது ஒன்று இல்லாவிட்டால் நம்மால் வாழ முடியாதோ அதைப் போற்றி வாழ்வதே அறிவுடைமை என்று படித்ததுண்டு. ஆணும், பெண்ணும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், இன்பமாய் செல்லும் இல்லறம் பலருக்குக் காலப்போக்கில் கசப்பதற்குப் பெண்களையே காரணமாகக் காட்டுகிறது இந்நூல். கூர்மையான பார்வைகளுக்குத் தெரியும் பெண்கள் பலவீனர்களோ, துணிச்சலற்றவர்களோ அல்ல என்பது. உலக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளத்தின் வலிமையையும், உடை நாகரிகங்களையும் துணிச்சலோடு மாற்றிக் கொண்டு வருபவர்கள் […]

Read more

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2

சரித்திரப் புகழ் தெய்வீக இசைப் பாடகர்கள் பாகம் – 2, எஸ்.எஸ். பரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், பக். 328, விலை 275ரூ. முறையான இசைப் பயில விரும்புவோர், ஒரு சாகித்தியத்தை யார் எழுதியது என்பதையும், அந்த சாகித்தியத்தின் முழு அர்த்தத்தையும் முற்றிலும் புரிந்து கொள்ள முனைவர். இதெல்லாம், இசைக் கல்லூரிகளில் பயின்றால் மட்டுமே சாத்தியம். இப்போதைய அவசர உலகில், சங்கீதம் கற்றுக் கொடுப்பவர்களே, வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் காட்டுவதில்லை. ஆனால், வாக்கேயக்காரர்கள் பற்றி அறிய ஆவல் கொண்டோர், அவர்களைப் பற்றி மேம்போக்காக எழுதப்பட்டுள்ள […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 320ரூ. தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில் இருந்தே, தமிழ்வாணனின், ‘என்னை கேளுங்கள்’ என்ற கேள்வி – பதில் பகுதி துவங்கியது. அப்பகுதி, தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், நகைச்சுவை, பொது என, மூன்று பிரிவுகளில், கேள்வி – பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘காமராஜருக்கு, சொந்த ஊரான விருதுநகரில், அவருக்கு மதிப்பு உண்டா’ என்ற கேள்விக்கு, ‘ஆப்பிள் பழம், காய்த்து […]

Read more
1 4 5 6 7 8 9