வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

கவியமுதம்

கவியமுதம், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 172, விலை 100ரூ. கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின்-தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு கலகக்குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கை தெரிகிறது. காமராசரையும் பெரியாரையும் பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும்போக்கு தெரிகிறது. காதலின் வலிமையும் மேன்மையும் தெரிகிறது. […]

Read more

பெயல் மணக்கும் பொழுது

பெயல் மணக்கும் பொழுது, அ. மங்கை, மாற்று. தமிழில் வெளிவந்துள்ள பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பில் மிக முக்கியமான தொகுப்பாக பெயல் மணக்கும்பொழுது அமைந்துள்ளது. ஈழ பெண் படைப்பாளிகளின் இலக்கிய பதிவுகள், முடிவுறாத போராட்டமாக தொடரும் பல நிலைப்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ள, இந்த தொகுப்பை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழ தமிழர்களின் வாழ்வில், பல முக்கியமான மாற்றங்களும், சிதறல்களும், அலைவுகளும் இந்த காலகட்டத்தில் இடம்பெற்றுவிட்டன. 93 கவிஞர்களின் கவிதைகள், சிக்கலான பல்வேறுமுகங்களுடைய அவலங்கள் நிறைந்த, ஈழ வாழ்வை பாடுகின்றன. இந்த தொகுப்பிற்கு வ. […]

Read more