கருப்பட்டி

கருப்பட்டி, ஆசிரியர் : மலர்வதி,  காலச்சுவடு பதிப்பகம், விலை 175/- பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வட்டாரம் சார்ந்து எழுதுகிறார்கள். அதில் மலர்வதியும் ஒருவர். நாஞ்சில்நாட்டு மொழியும், அப்பகுதி மக்களின் வாழ்க்கையும் இவரது புனைவுகளில் அப்பிக் கிடக்கின்றன. ‘காத்திருந்த கருப்பாயி’, ‘தூப்புக்காரி’, ‘காட்டுக்குட்டி’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். வாசகர்களின் பெருவாரியான கவனம் பெற்ற ‘தூப்புக்காரி’ நாவலுக்கு சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கிடைத்தது. ‘கருப்பட்டி’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. கருப்பட்டி என்பது வெறும் இனிப்புப் பொருளன்று; பண்பாட்டின் குறியீடும்கூட.  அந்நில வாழ்க்கையின் ஒரு […]

Read more

பஷீர் நாவல்கள்

பஷீர் நாவல்கள்; ஆசிரியர் வைக்கம் முகம்மது பஷீர், தமிழில்: குளச்சல் யூசுப், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.575/- தனிமனிதரின் உலகம் மிகப் பெரிய வெளிச்சங்களைத் தன்னகத்தே மிக ஆழத்தில் வைத்திருக்கிறது. ஆழத்தில் படிந்திருக்கும் அதிசயங்களைத் திறந்து காண்பித்தவர் பஷீர். எண்ணங்களிலும் வாழ்விலும் என்றுமே குறைந்திடாத பேரன்புகளைக் குழந்தைமையின் மாசில்லா வார்த்தைகளில் இலக்கியமாக்கியவர். வெவ்வேறு தருணங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் எட்டு நாவல்களையும் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது தமிழ் வாசகர்களுக்கான ஒரு அழகிய பரிசு. வைக்கம் முகம்மது பஷீரின் நுட்பமான எழுத்துகளையும், இழையோடும் நகைச்சுவையையும், […]

Read more

அன்பே ஆரமுதே

அன்பே ஆரமுதே, தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.500/- மருத்துவர்கள் எல்லாக் காலத்திலுமே கடவுளுக்கு இணையாகவே மதிக்கப்பட்டுவருகிறார்கள். என்றாலும், இந்த கரோனா காலம் எப்போதைவிடவும் இப்போது மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த நன்றியுணர்வோடு பார்க்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது. மனிதர்களின் இன்ப துன்பங்களை விசாரணைக்கு உட்படுத்தும் இலக்கியங்களில் துயரம் தீர்க்கும் மருத்துவர்களுக்கும் இடமில்லாமல் இருக்குமா? தன்னலமற்ற மருத்துவர் ஒருவரைப் பற்றிய மகத்தான சித்திரத்தைத் தமிழுக்கு அளித்திருக்கிறார் தி.ஜானகிராமன். ‘அன்பே ஆரமுதே’ நாவலின் நாயகனான அனந்தசாமி, ஒரு மருத்துவர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இல்லை. சந்நியாசத்தோடு வைத்தியமும் […]

Read more

பெருவலி

பெருவலி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: 225 சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலில் வலி என்பது வலிமை, நோய்மை என்பதாக இருவேறு பொருள்களைத் தருகிறது. அதிகாரத்தின் வலியையும் அகவலியையும் கடந்த காலத்தினூடே நிகழ்கால அரசியல் அடக்குமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்படியான நிகழ்வுகளோடு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வலிமை எங்கிருந்தாலும் அது அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைக்கு உட்படுத்தி அடிமையாக்கலாம் என்பதை நாம் வரலாறு நெடுகக் காண்கிறோம். ஷாஜகானின் மகள் இளவரசி ஜஹானாராவைப் பற்றி மிகுபுனைவு இல்லாமல் அவளின் அந்தரங்க நாட்குறிப்புகளை வைத்துக் கவித்துவ மொழியில் இந்நாவலை எழுதியுள்ளார் சுகுமாரன்.   அரச குலத்துப் பெண்களின் […]

Read more

நகரப் பாடகன்

நகரப் பாடகன், குமாரநந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 225ரூ. சிறு கதைக்குள் புதைந்திருக்கும் பெரும் வாழ்வு! எதன் மீதும் புகார்களற்றதும் கசப்பற்றதுமான பார்வைதான் குமாரநந்தனுடையது. வெளிச்சத்தில் தென்படும் இருட்டும், வெப்பத்தின் அடியிலுள்ள குளிர்மையும், உள்ளில் காணும் வெளியும் ஒன்றாக உணரப்படுகின்றன. எளிமையான கதைகள்போல தோற்றம் தரும் குமாரநந்தனின் சிறுகதைகள் ஒரு கதைக்குள் பல உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் தன்மையுடையவை. அவரது கதையாடல்களில் யதார்த்தம், கனவுகள், அறிவியல், அமானுஷத் தருணம் போன்றவை பிரிக்க இயலாதவாறு இணைந்திருக்கின்றன. ஒவ்வொன்றோடும் வாழ்வின் பகுதிகள் தீர்க்கமாகப் புனைந்து காட்டப்பட்டுள்ளன. அதனாலேயே, ஒவ்வொரு […]

Read more

பாதுஷா என்ற கால்நடையாளன்

பாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை […]

Read more

புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.200. கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான […]

Read more

புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ 200. எரிக்காத வெளிச்சத்தின் கவிதைகள் கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் […]

Read more

மேற்கத்திய ஓவியங்கள்

மேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 975ரூ. கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார். இப்போது இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: […]

Read more

இந்த இவள்

இந்த இவள், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம், வலை 175ரூ. நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம்! நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 2 3 4 12