அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை, காவ்யா, சென்னை, விலை 480ரூ. பழைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை இந்த நூலில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் எழிலமுதன் தொகுத்து வழங்கியுள்ளார். இயல், இசை, நாடகம், அறிவியல், ஆய்வு என ஐந்து தமிழுக்கும் நெல்லைத் தமிழ் தலைமை தாங்குகிறது. கவிதைக்குப் பாரதி, கதைக்குப் புதுமைப்பித்தன், நாடகத்துக்குச் சுந்தரம் பிள்ளை, அறிவியலுக்கு அப்புசாமி, சு. முத்து, ஆய்வியலுக்கு தி.க. சிவசங்கரன், தொ.மு. சி. ரகுநாதன் இப்படி நீள்கிறது, பட்டியல். ஜனநாயகத்திற்கேற்ப இதழியலை ஜனரஞ்சகமாக்கியவர் ஆதித்தனார். பாமரரென்று ஒதுங்கிக்கிடந்த […]

Read more

அட்டவீரட்டத் தலங்கள்

அட்டவீரட்டத் தலங்கள், அ. அறிவொளி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, பக். 152, விலை 45ரூ. சிவபெருமான் திருவிற்குடி, திருவதிகை, திருப்பறியலூர், திருக்கண்டியூர், திருக்குறுக்கை, திருவழுவூர், திக்கடவூர், திருக்கோவிலூர் ஆகிய எட்டுத் திருத்தலங்களில் நிகழ்த்திய வீரச் செயல்களை விளக்குவதால் இவ்வெட்டுத் தலங்களும் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும். அட்டவீரட்ட திருத்தலங்களின் காரணங்களாக படைப்பு முழுவதற்கும் எட்டு ஆதாரங்கள் சொல்லப்பெற்றுள்ளன. அவை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் ஒத்துவரும். இந்த எட்டிலும் இறைவனின் சக்திரகள் கலந்து நிறைந்துள்ளன. இவையே இந்தப் படைப்பைக் காத்து வருகின்றன. இப்படிப்படைப்பு முழுவதிலும் விரவிக்கிடக்கும் ஆதாரப் […]

Read more