மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்)

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. தமிழ்நாட்டில் பிறந்து, பிரெஞ்சு படையில் பணி புரிந்து பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து போர்த் தளபதியாக உயர்ந்தவன் மருதநாயகம். முஸ்லிம் மதத்தில் சேர்ந்ததால் யூசுப்கான் என்றும் கான் சாகிப் என்றும் அழைக்கப்படுகிறான். தீரமும், வீரமும் மிக்க மருதநாயகத்தின் வரலாற்றை எழுத்தாளர் பாஸ்கரதாஸ் எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டவன், மருதநாயகம். பிற்காலத்தில் அவர்களின் அடக்குமுறையை தாங்கிக் கொள்ள அவனது தன்மானம் இடம் தரவில்லை. எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு […]

Read more

நினைவு அலைகள்

நினைவு அலைகள், கலாநிகேதன் பாலு, வசந்தா பிரசுரம், சென்னை, பக். 206, விலை 150ரூ. கலைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இந்நூலாசிரியர். இவர் 60களில் கலாநிகேதன் சபாவில் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, அன்றைய பிரபலங்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை அமுதசுரபி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும் எழுத, அது பிரபலமானது. இந்நூலில் அவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் கட்டுரையில் ஷெனாய் வாத்ய மேதை பிஸ்மில்லாகான் சென்னை வந்தபோது, அவரையும் அவரது இசைக்குழுவினரையும் திருமதி சுப்புலெட்சுமி கல்கி சதாசிவம் தங்கள் […]

Read more