மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more