காயப்படும் நியாயங்கள்
காயப்படும் நியாயங்கள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 70ரூ.
முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார் கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம். நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் நாய்க்குட்டி, பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும்இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் ஏணிகளும் தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால் அந்தத் தபால்காரருக்கு வரும் முதல் கடிதமே அதிர்சி அளிப்பதாய் இருக்கிறது என்பதை சொல்லும் முதல் கடிதம்; எழுத்தாளர்களிலும் சோரம் போகின்றவர்கள் இருக்கின்றனர் என்பதை விளக்கும் சிவப்பு என்பது நிறமல்ல; முரட்டுக் கணவனை ஒரு மனைவி அன்பினால் வெல்லலாம் என்பதை வர்ணிக்கும் வடிகால் போன்ற கதைகள் இந்தத் தொகுதிக்கு சிறப்பு சேர்க்கும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 12/4/2015.
—-
தென்னாலிராமன் கதைகள், நண்டுமாமா, தென்றல் நிலையம், கடலூர் மாவட்டம், விலை 50ரூ.
கிருஷ்ண தேவராயரின் அமைச்சரவையில் விகட கவியாக விளங்கியவர் தெனாலிராமன். இவர் நகைச்சுவையுடன் திகழ்வதுடன், மதி நுட்பம் மிகுந்தவர். இவருடைய 23 கதைகள் தேர்வு செய்து நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 25/2/2015.