நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்

நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. இது வரலாற்று நூல் என்றாலும், விறுவிறுப்பான நாவலைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும் வகையில் துணுக்குத் தோரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதனை தடம் பதித்தவர்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான, அதே சமயம் உயரிய வாழ்க்கைக்கு உரம் போட்ட நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், மின்னல் வேகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக சுருக்கமாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பல தலைவர்கள் பற்றி இதுவரை அதிகம் கேள்விப்படாத தகவல்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் இதில் இடம் […]

Read more

மிர்ஸா காலிப்

மிர்ஸா காலிப் (மொழிபெயர்ப்பில்) – துயரின் இதழ்களில் விரியும் புன்னகை, பாரஸீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மூஸா ராஜா, ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.264, விலை ரூ.275. புகழ்பெற்ற உருது, பாரசீக மொழி கவிஞரான மிர்ஸா காலிப்பின் பாரசீக கவிதை நூலை மூஸா ராஜா ஆங்கிலத்தில் THE SMILE ON SORROW என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லதா ராமகிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். கவிஞர் மிர்ஸா அஸாதுல்லா கான் காலிப் 1797 – […]

Read more

பசும்பொன் சரித்திரம்

பசும்பொன் சரித்திரம், பேரா. காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, பக். 373, விலை 350ரூ. பாரத ராஜசிங்கம் பக்தர் கொண்டாடும் தங்கம், வீராதி வீரசிங்கம், முத்துராமலிங்கம், வெற்றியே முழங்குவது எங்கும் என்று கவிராயரால் பாராட்டி வாழ்த்தி தெய்வமாய் வணங்கப்பட்ட முக்குலத்துப் பெருமக்களின் நாயகனாம் தேவர் திருமகனது வாழ்வியல் சரிதை நூல் இந்நூல். “”பத்தரை மாற்றுப் பசும்பொன்” என்ற தலைப்போடு 146 அதிகாரங்களை நல்ல கட்டமைப்புடன் காவ்யாவிற்கே உரிய அழகோடு வெளியிட்டுள்ளது. தேவரது வீர உரைகள் பக்கத்திற்குப் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “”காமராசர் மீது எவரேனும் […]

Read more

ஞானி வாசகம் நானூறு

ஞானி வாசகம் நானூறு, தொகுப்பாசிரியர்: ஜே.மஞ்சுளா தேவி, புதுப்புனல், பக்.440, விலைரூ.390. மார்க்சியம், தமிழ் இலக்கியம் , அரசியல், ஆன்மிகம், வரலாறு என பலதுறை அறிவுமிக்க கோவை ஞானி எழுதிய பல நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துகளை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்து எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மரபுவழியிலான அல்லது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளுடன் ஞானி எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. […]

Read more

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6, சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை ரூ.80. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் […]

Read more

மூளைக்குள் சுற்றுலா

மூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 658, விலை 1500ரூ. ‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர். சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு. ‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more
1 5 6 7