விரிசல்

விரிசல், கா.சிவா, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150 நினைவுகளில் ஊடாடும் நிலம் இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் […]

Read more

கேள்விகளின் புத்தகம்

கேள்விகளின் புத்தகம், பாப்லோ நெரூதா, தமிழில்: பிரம்மராஜன், சொற்கள் வெளியீடு, விலை: ரூ.425 பாப்லோ நெரூதா எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கும் பெருந்தொகுப்பு இது. இயற்கை, உலகில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் தொடர்பில் கவிஞனுக்கே உரிய விந்தையுடன் எழுப்பப்பட்ட கேள்விகளாக நெரூதா எழுதிய ‘கேள்விகளின் புத்தகம்’ கவிதைகள் இந்தத் தொகுப்பின் முதல் பகுதி. அரசியல் கவிஞராகத் தமிழில் அறிமுகமாகியிருக்கும் நெரூதாவின் வேறு பரிமாணத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இன்னொரு பகுதி. நெரூதாவை அறிந்துகொள்வதற்கான சிறந்த கட்டுரையும் குறிப்புகளும் இந்நூலில் உண்டு. கவிதைகளுக்கேற்ற ஓவியங்களும் […]

Read more

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள், பி.சாய்நாத், தமிழில்: ஆர்.செம்மலர், பாரதி புத்தகாலயம் வெளியீடு, விலை: ரூ.550. இந்தியாவில் கிராமப்புறச் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவற்றுக்குத் தனிக் கவனத்தை உருவாக்கிய மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தின் பிரபலமான புத்தகம் இது. விவசாயிகளின் பிரச்சினைகள், கிராமப்புறங்களில் நிலவும் கல்வி, சுகாதாரச் சிக்கல்கள், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் தோல்விக்குக் காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது. வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, இடைத்தரகர்களால் விவசாயிகளின் வருமான இழப்பு, சாராயம் காய்ச்சுபவர்களின் […]

Read more

சித்ரசூத்ரம்

சித்ரசூத்ரம், தமிழில்: அரவக்கோன், அனன்யா வெளியீடு, விலை: ரூ.140. இந்தியாவின் ஓவிய மரபுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள், இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பண்டைய ஓவியக் கலைக்களஞ்சியம் ‘சித்ரசூத்ரம்’. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விஷ்ணுதர்மோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலை 1924-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியவர் கலை வரலாற்றறிஞர் ஸ்டெல்லா கிராம்ரிஷ். ஆங்கிலத்திலிருந்து மாதிரி ஓவியங்களுடன் தமிழில் இந்த நூலை அரவக்கோன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியக் கலைமரபின் வீச்சை தமிழில் அறிவதற்கு உதவிகரமான நூல் இது. நன்றி: தமிழ் இந்து,.6/3/21 இந்தப் […]

Read more

தே: ஒரு இலையின் வரலாறு, இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

தே: ஒரு இலையின் வரலாறு, ராய் மாக்ஸம், தமிழில்: சிறில் அலெக்ஸ், இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்கு வெளியீடு, மொத்த விலை: ரூ.650. தமிழ் வாசகர்களுக்கு ‘உப்பு வேலி’ மொழிபெயர்ப்பு நூல் மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர் ராய் மாக்ஸம். இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ‘உப்பு வேலி’க்கும் தொடர்பு இருக்கிறது. எந்த வழியிலெல்லாம் இந்தியா காலனியப்படுத்தப்பட்டது என்பதை சுவாரஸ்யமான நடையில் கூறுபவை இந்தப் புத்தகங்கள். இந்திய வரலாற்றில் தேயிலைக்கு உள்ள முக்கியமான இடத்தை ஒரு புத்தகம் சொல்கிறதென்றால் இன்னொரு புத்தகம் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளைப் பற்றிய […]

Read more

மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள்

மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள், ஐ. ஆனந்தி, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. பிரசன்னம் மூலம் பலன்கள் சொல்லும் இந்த நூலின் ஆசிரியர், மணவாழ்வு, தொழில் யோகம், குழந்தை நலன், செவ்வாய் தோஷம், காதல் விவகாரம் பற்றியும் இவற்றால் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் என்ன என்பதையும் எளிய தமிழில் சொல்லி இருக்கிறார். நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நாங்கூழ்

நாங்கூழ், மின்ஹா, கருப்புப்பிரதிகள் வெளியீடு, விலை: ரூ.70. கவிதைகள் பெரும்பாலும் நிரந்தர அர்த்தம் உடையவை அல்ல. அவை காலந்தோறும், நிலந்தோறும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அவரவருக்குத் தக்கவாறு தனித்துவமான நுகர்ச்சியை வழங்கக்கூடியவை. இவற்றைக் கடந்து கவிதைகளுக்குச் சில பொதுவான பண்புகள் உண்டு என்பதும் மறுக்க இயலாது. படைப்பிலக்கிய வகைமைகளில் மற்ற எல்லாவற்றையும்விடக் கவிதைகளின் பங்கே இவ்வுலகில் கணிசமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயற்கையோடு இணைந்து வாழும் விருப்பமுடைய மனித மனம் ஏராளமான ரகசியங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. ரகசியங்களில்தான் கடவுளும் படைப்பும் […]

Read more

மனம் செய்யும் மாயவித்தை

மனம் செய்யும் மாயவித்தை, ரவி வல்லூரி, மணிமேகலை பிரசுரம், விலை- ரூ.260. இந்த நூலின் ஆசிரியரான ரவி வல்லூரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் பெற்றோர் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்திருக்கிறார். கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளும் துரதிர்ஷ்டங்களும் நிறைந்த இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வையும் பக்குவப்பட்ட மனநிலையையும் அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் வழிகாட்டும் […]

Read more

திருவடி

திருவடி, நா.க.ராமசாமி, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், விலை 90ரூ. சிவச்சிந்தனை என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் நிறைவுப் பகுதி திருவடி என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. பாவப் பலன்கள் தீரும் வழி, இறைவனை எவ்வாறு அடைவது, சிக்கல் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதுபோன்ற விச நெறி சார்ந்த வளமான கருத்துகள் இந்த நூலில் உள்ளன. நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பெண்மைய வாசிப்பும் அரசியலும்

பெண்மைய வாசிப்பும் அரசியலும், அரங்க மல்லிகா, புலம் வெளியீடு, விலை: ரூ.150. பெண்மைய வாசிப்பு பேராசிரியரும், சமூகச் செயல்பாட்டாளருமான அரங்க மல்லிகா விளிம்பு நிலை விடுதலைச் சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து பயணித்துவருபவர். இந்த நூலில் மொத்தம் 18 கட்டுரைகள். அத்தனையும் பெண்ணை மையப்படுத்தியே சுழல்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை பேராசிரியர் காத்திரமாகக் களமாடியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்கு அவர் புதுப்புதுத் தகவல்களை, தரவுகளை அள்ளியள்ளித் தருகிறார். வரலாற்று மூலமும் தொன்மமும் அவர் கட்டுரைகளில் மிக இயல்பாக வந்து நுழைகின்றன. அவை பண்பாட்டுத் […]

Read more
1 43 44 45 46 47 505