கிராமத்து தெருக்களின் வழியே

கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, மூலிகைகளை குவித்தனர். […]

Read more

என் கடமை – ஊழல் ஒழிக!

என் கடமை – ஊழல் ஒழிக!, நல்லம நாயுடு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்: 216; ரூ. 225. காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறும், பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களும் இந்நூலில் இரண்டு பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லம நாயுடு. மாணவப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கினார். கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். […]

Read more

கண்டதும்… கேட்டதும்…

கண்டதும்… கேட்டதும்…, விஜயலெட்சுமி மாசிலாமணி, விஜயா பதிப்பகம், விலைரூ.70. பல நாடுகளில் கண்டதையும், கேட்டதையும் அனுபவப்பூர்வமாக எழுதியுள்ளார். பெண்கள் படும் துயர் பற்றியும் அக்கறையுடன் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் பல நிலையில் உள்ளோர் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புரட்சிக் கருத்துக்களை பதிவு செய்துள்ள பயண நுால். சிறுகதைகள் போல் உரையாடல் மொழியில் எழுதப்பட்டுள்ளது. சுவாரசியம் மிக்க சம்பவங்களைக் கொண்டது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232. விலை ரூ.220; பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் […]

Read more

தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், முனைவர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக் ஹவுஸ், விலைரூ.80. சமீபத்தில் மறைந்த பிரபல பேராசிரியர் தொ.பரமசிவனுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. முதலில் சந்தித்ததில் இருந்து, பழக்க வழக்கங்கள், நற்பண்புகள், வழிகாட்டல்கள், அதன் மூலம் கற்றவை, குடும்ப சந்திப்புகள் என, பலவித நினைவுகளை எளிமையாக எழுதியுள்ளார். மிகவும் நுட்பமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் தருகிறது. இலக்கிய சுவையுடன் திகழ்கிறது. இரு பிரபலங்களிடையேயான சந்திப்பு, உரையாடல்கள் படிப்பினை தரும் வகையில் உள்ளது. அரிய அனுபவப் பதிவு நுால். […]

Read more

எத்தனை கோணம் எத்தனை பார்வை

எத்தனை கோணம் எத்தனை பார்வை, சீத்தலைச்சாத்தன், ஒப்பிலாள் பதிப்பகம், விலைரூ.99. கவிஞர் கண்ணதாசனின் பார்வைகள் பற்றி ஐந்து தலைப்புகளில் மிளிரும் நுால். கண்ணதாசனின் அனுபவங்களும் பளிச்சிடுகின்றன. என்ன துணிச்சல், யாருக்கு வரும் இந்தத் துணிச்சல், மணவிழாப் பாட்டு கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இறந்த பின் இறுதி ஊர்வலத்தில் பாட, 1966ல் எழுதிய மரண சாசனம், ஏழு பாடல்களில் எழுதியுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான தகவல்களைத் தருகிறது. – பேராசிரியர் இரா.நாராயணன், நன்றி: தினமலர், 3/1/21, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

என்னை வளர்த்த சான்றோர்

என்னை வளர்த்த சான்றோர், டி.கே.எஸ். கலைவாணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.175 பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும் ஆசான்களுடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த சிறுவனின் இளமைக் காலம் மிளிர்கிறது. சம்பவங்கள், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரகாசித்த நட்சத்திரங்களின் இயல்புகளை, அனுபவச் சுவட்டில் இருந்து கொட்டியுள்ளார். பணிவும், நெருக்கமும் வெளிப்படுகிறது; நகைச்சுவை படர்கிறது. பிரபலமாக இருந்த கலைவாணர், இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன், […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை , வரலாற்றுத் தடங்களின் வழியே,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104, விலை ரூ.120. தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் […]

Read more

மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more
1 2 3 4 6